அமெரிக்காவில் ஒருவர் வாகனம் ஓட்டும் போது பாலுறவு கொண்ட நிலையில், அந்த கார் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நம்மில் பலரும் வாகனத்தில் போகும் போது தான் வித்தியாசமான சாகசத்தில் ஈடுபட நினைப்போம். இது சில நேரங்களில் நமக்கு சாதகமாக அமைந்தாலும் பல நேரங்களில் நமக்கு ஆபத்தாகவே மாறிவிடும். இதுபோன்ற சம்பவங்கள் உலகளவில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 




இதனிடையே அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கார் ஒன்று லாரி மீது கடந்த ஜூன் 2 ஆம் தேதி மோதி விபத்துக்குள்ளானது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த  ஃபோர்ட் லாடர்டேல்  மீட்பு படையினர் அதற்கான பணிகளில் ஈடுபட முயன்றனர். விபத்தில் உள்ளே சிக்கியவர்களை மீட்க கார்  கதவை திறந்து பார்த்த போது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. காரணம் உள்ளே நிர்வாணமாக ஒரு ஆணும், அவரது தோழியும்இருந்துள்ளனர். 


இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையின் போது தான் என்ன நடந்தது என்பதே வெளிச்சத்துக்கு வந்தது. ஓடும் காரில் உடலுறவு கொள்ள நினைத்த அந்த இருவர் இதற்காக வித்தியாசமான வழிமுறைகளை முயற்சித்துள்ளனர். அப்போது வாய் வழி உடலுறவில் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக லாரி மீது கார் மோதி விபத்து நடைபெற்றுள்ளது தெரிய வந்தது. இந்த விபத்தில் இரு வாகனத்திலும் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் தப்பினர். 


இந்த சம்பவத்திற்கு சமூக வலைத்தளங்களிலும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தெற்கு டகோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 195 ஆண் மற்றும் 511 பெண்களிடம் நடத்திய ஆய்வில் 64 ஆண்கள் மற்றும் 47 பெண்கள் வாகனம் ஓட்டும் போது உடலுறவு கொண்டதாக தெரிவித்தனர்.  இதன்மூலம் ஏறக்குறைய 37%  பேர் வாகனம் ஓட்டும் போது ஏதோ ஒரு வகையில் உடலுறவில் ஈடுபட விரும்புவதாக தெரியவந்துள்ளது. இவர்களில் 11% பேர் பாலியல் செயல்களில் ஈடுபடும் போது வாகனத்தின் ஸ்டீயரிங் வீலை விடுவதாக தெரிவித்துள்ளனர். 


மேலும் பதிலளித்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வாகனத்தின் பின்னால் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடும் போது வேகமாகச் சென்றதாக ஒப்புக்கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண