Lioness Kills Keeper | கட்டுப்படுத்த முயன்ற காவலரை கொன்றுவிட்டு, தன் துணையுடன் தப்பித்தது பெண் சிங்கம்..

ஈரானில் உள்ள பூங்கா ஒன்றில் காவலரை கொன்றுவிட்டு, துணையுடன் சிங்கம் தப்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

Continues below advertisement

ஈரான் மர்காசி மாகாணம், அராக் நகரில் உயிரியியல் பூங்கா ஒன்று உள்ளது. இங்கு பல வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வந்த, இரண்டும் சிங்கங்கள் அடைக்கப்பட்டிருந்த கூண்டிலிருந்து எப்படியோ வெளியே வந்துள்ளது. அப்போது அங்கு அவைகளுக்கு உணவு வைப்பதற்காக,  40 வயது காவலர் ஒருவர் அங்கு வந்துள்ளார். இதை கவனித்த  பெண் சிங்கம், காவலரை கொடூரமாக தாக்கி கொன்றுவிட்டு, தனது துணையுடன் அங்கிருந்து தப்பித்துள்ளது. 

Continues below advertisement

இது குறித்து அங்கு பணிபுரியும் சக காவலர் கூறும் போது, “ இரு விலங்குகள் பூங்காவில் இருந்து தப்பித்தது. 

 

சம்பவம் நடந்த மறுகணமே,பூங்காவின் காவலர்கள் பூங்காவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இரண்டு சிங்கங்களையும் உயிருடன் பிடித்து விட்டோம்” என்றார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola