Zombie Drug: அமெரிக்காவில் ’சைலாசின்’ என்ற போதைப்பெருளை பயன்படுத்துவர்கள் ஜாம்பி போல மாறுவதோடு, பல உயிர் இறப்புகள் நிகழ்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


ஜாம்பி வைரஸ்


தி வால்கிங் டெட், ஜாம்பி லேண்ட் என பல ஹாலிவுட் திரைப்படங்களிலும், தமிழில் மிருதன் படத்திலும் ஜாம்பியை நாம் பார்த்தது உண்டு. வைரசால் பாதிக்கப்பட்ட நபர்கள் முற்றிலும் தன்னிலை மறந்து, மிருகமாக மாறி சக மனிதனை கடித்து குதறும் மோசமான விளைவுகளை ஜாம்பி வைரஸ் ஏற்படுத்தும். திரைப்படங்களில் காண்பது கற்பனைக்கதையாகவே இருந்தாலும்,  நிஜ வாழ்விலும் ஜாம்பி வைரசை ஒத்த விளைவுகள் இப்புவியில் நடந்துள்ளது. அமெரிக்காவில் போதைப்பொருள் உட்பதால் ஜாம்பியாக மாறுவதாகவும் இதனால் பல உயிரிழப்புகள் நிகழ்வதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த போதைப்பொருளின் பெயர் ’சைலாசின்'  என்று தெரிகிறது.


‘சைலாசின்’ மருந்து


'டிராங்க் ட்ராங்க டோப்' ஜாம்பி மருந்து என்றும் அழைக்கப்படும். இந்த போதை மருந்தின் பெயர் சைலாசின் (xylazine). இந்த  போதை மருந்தை எடுத்துக் கொண்டால் மிக மோசமான பக்க விளைவுகள் ஏற்படுவதோடு, மயக்க மருந்து உட்கொண்டதுபோல் இருக்கும் என்று கூறப்படுகிறது.   மேலும், பயங்கர தூக்கம், மன அழுத்தம், மூச்சி விடுவதில் சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. 


இந்த சைலாசின் என்ற போதை மருந்தை உட்கொள்ளும் நபர்களுக்கு நிற்கவே முடியாமல் தள்ளாடிக் கொண்டிருப்பதாக தெரிகிறது. இதுமட்டுமின்றி, ஜாம்பி போன்ற அறிகுறிகளையும் வருவதாக கூறப்படுகிறது. இந்த ஜாம்பியானது தோல்களில் துளைகள் ஏற்படுவதோடு, கால் மூட்டுகள் செயல்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், சைலாசின் மருந்தை கால்நடைகளில் பயன்பாட்டிற்காக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த  போதை மருந்தின் முக்கிய பிரச்சனை என்னவென்றால் ஒருவர் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால்  உயிரைக் காப்பாற்றவது கடினம் என்று கூறப்பட்டிருந்தது.


பறிப்போன உயிர்கள்


இந்நிலையில், இந்த சைலாசின் போதைப்பொருள் மருந்தை உட்கொண்டதால் கடந்த 18 மாதங்களில் அமெரிக்காவின் ஆரஞ்ச் என்ற பகுதியில் சுமார் 9 பேர் உயிரிழந்ததாகவும், 180 பேர் உயிருக்கும் போராடி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அளவுக்கு அதிகமாக சைலாசின் போதைப்பொருளை உட்கொண்டதால் உயிரிழப்பு நேர்ந்ததாக கூறப்படுகிறது.


இதற்கிடையில், சைலாசின் என்ற மருந்து முதன்முதலில் 2006ஆம் ஆண்டு  பிலடெல்பியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நியூயார்க் நகர சுகாதாரத்துறை அறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டு இந்த சைலாசின் என்ற மருந்தை உட்கொண்டதால் 2,668 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சைலாசின் மருந்து குறித்து 10 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 2015ல் 1 சதவீத இறப்புகளும், 2021ல் 6.7 சதவீத இறப்புகளும் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.