கின்னஸ் சாதனை நிறுவனம் பொதுவாக அசாத்தியமான சாதனைகளைக் கண்டறிந்து அங்கீகரிக்கும் நிறுவனமாகும். அந்த வகையில் ஜப்பான் தற்போது நூதன சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.


ஜப்பானில் வார இறுதியில், ‘ஒரே பெயரைக் கொண்ட மக்கள் அதிகம் கூடும் ஒரு புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. டோக்கியோவின் ஷிபுயா மாவட்டத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் 'ஹிரோகாசு டனகா' என்று அழைக்கப்படும் 178 பேர் கூடினர். 2005ம் ஆண்டு அமெரிக்காவில் ஒன்றாக வந்த மார்த்தா ஸ்டீவர்ட்ஸ் என்ற 164 பேர் இதற்கு முன்பு இந்தப் பட்டத்தை வைத்திருந்தனர்.


இக்கூட்டத்தில் பல்வேறு தரப்பு மக்களும், பல்வேறு வயதினரும் கலந்து கொண்டனர். வியட்நாமின் ஹனோயில் இருந்து ஜப்பானுக்கு பறந்து சென்ற மூன்று வயது குழந்தையும் 80 வயது முதியவரும் கூட இந்தக் கூட்டத்தில் இருந்தனர்.


கின்னஸ் உலக சாதனை படைத்த ஜப்பான் ட்விட்டரில் பகிர்ந்துள்ள காணொளி, கின்னஸ் உலக சாதனை நடுவர் புதிய சாதனையைப் படைத்ததாக அறிவித்ததை அடுத்து மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்ததைக் காட்டுகிறது.இது தற்போது வைரலாகி வருகிறது.


டோக்கியோவைச் சேர்ந்த 53 வயது கார்ப்பரேட் ஊழியரான ஹிரோகாசு தனகா என்பவர்தான் இதனை ஒருங்கிணைத்துள்ளார். இதற்கு முன்பு அவர் இரண்டு முறை இந்த சாதனையை நிகழ்த்த முயற்சி செய்துள்ளார். ஜப்பானிய செய்தித்தாளான மைனிச்சி ஷிம்பன், பேஸ்பால் சாம்பியன் ஹிரோகாசு தனகாவைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்த பிறகு, அவரைப் போன்றவர்கள் மீது தனகா ஆர்வம் காட்டினார்.


பின்னர் அவர் அதே பெயரில் உள்ளவர்களைக் கண்டுபிடித்து இறுதியில் "ஹிரோகாசு தனகா பிரச்சாரத்தை" நிறுவினார். ஊடகங்களில் பேசியுள்ள தனகா, ”இதுபோன்ற அபத்தமான சாதனையை நாங்கள் அடைவோம் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை" என்று கூறினார், மேலும் தனகாக்கள் கூடுகை மக்களின் குறும்புத்தனத்துக்கு அடையாளம் எனக் கூறியுள்ளார். வைரலாகும் வீடியோ கீழே..