சிலியில் 16 அடி நீளமுள்ள அசுர மீனை மீனவர்கள் குழு பிடித்த வீடியோ இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது. இந்த மீனை பிடித்ததையடுத்து உள்ளூர்வாசிகள் ஒரு சில பேர், சுனாமி மற்றும் பூகம்பங்கள் வருவதற்கான கெட்ட சகுணம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Continues below advertisement


அரிகா நகரில் பிடிபட்ட இந்த 16 அடி நீளமுள்ள மீன், ரோயிங் மீன் என்று அழைக்கப்படும் கோலோசல் ஓர்ஃபிஷ் இனத்தை சேர்ந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளது. வரவிருக்கும் சுனாமிகள் மற்றும் நிலநடுக்கங்களுக்கான சகுனமாக நீண்ட காலமாக ஓர்ஃபிஷ் பார்க்கப்படுகிறது. இந்த கோட்பாடு உண்மையில் அறிவியலால் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் உள்ளூர்வாசிகள் முழுமையாக நம்புகின்றனர். 



ஓர்ஃபிஷ் :


ஓர்ஃபிஷ் பொதுவாக ஆழமான மற்றும் கடலுக்கடியில் வாழக்கூடிய உயிரினம் ஆகும். இவை நோய்வாய்ப்பட்ட நேரத்திலோ அல்லது இறக்கும் தருவாயில் மட்டுமே மேற்பரப்புக்கு வரும். அதேபோல், இனப்பெருக்கம் செய்யும் போதும் மேற்பரப்புக்கு வரும். 


நேஷனல் ஜியோகிராஃபிக் கருத்துப்படி, "கடல் பாம்புகள் மற்றும் கடல் அரக்கர்களைப் பற்றிய பல வரலாற்றுக் கதைகளின் ஆதாரமாக துருப்பு மீன்கள் இருந்தபோதிலும் இவை ஒருபோதும் மனிதர்களுக்கு ஆபத்தானவை அல்ல. முள்ளெலிகள் சிறிய பிளாங்க்டனை உண்ணும் இந்த வகை மீன்கள் செரிமான அமைப்பில் ஒரு சிறிய திறப்பைக் கொண்டுள்ளன. மேலும், சிறிய உயிரினங்களைப் பிடிக்க கில் ரேக்கர்ஸ் எனப்படும் மெலிந்த அமைப்புகளைக் கொண்ட பொய்யான பற்கள் இதற்கு காணப்படும். 






ஓர்ஃபிஷ் எப்போதாவது நீரின் மேற்பரப்பில் காணப்படும். இவைகள் மேற்பரப்புக்கு வரும் நேரத்தில் புயல்கள் அல்லது வலுவான நீரோட்டங்களால் மேற்பரப்புக்கு வருவதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். இவை மீன்கள் துன்பத்தில் அல்லது இறக்கும் போது மேற்பரப்புக்கு வந்து தன் உயிரை விடும். ஓர்ஃபிஷ் பயங்கரமான கடல் அரக்கனைப் போல் தோன்றலாம். ஆனால் இது மக்களுக்கு அல்லது படகு ஓட்டுபவர்களுக்கு எந்தவொரு ஆபத்தையும் இதுவரை ஏற்படுத்தவில்லை” என்று தெரிவித்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண