Ladakh Earthquake : லடாக்கில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கார்கில் பகுதியில் ஏற்பட்டதாக  தகவல் வெளியாகி உள்ளது.


மார்ச் 17, 2023, வெள்ளிக்கிழமை, அந்நாட்டு நேரப்படி இரவு 11:49  மணியளவில், லடாகின் கார்கில் பகுதியில் 250  கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மிகுந்த ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால்  நில அதிர்வின் வலிமையானது சற்று குறைந்து பதிவாகியுள்ளது என கூறியுள்ளனர். லடாக்கின்  314 கி.மீ தொலைவில் உள்ள கார்கிலில் லேசான நில அதிர்வு  உணரப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதாரங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.






இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் “ நிலநடுக்கம்: 5.0 ரிக்டர் அளவில் நேற்று இரவு 11.49 மணியவில் ஏற்பட்டது. 250 கிலோ மீட்டர் ஆழத்தில் லடாக்கின் கார்கிலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், நிலநடுக்கம் ஏற்பட்ட அப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை.


முன்னதாக, 


கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் உலகில் பல பகுதிகளில் பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6ஆம் தேதி குஜராத்தின் துவாரகா பகுதியில் காலை 6.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.3 புள்ளியாக இந்த நிலநடுக்கம் பதிவானது.


மார்ச் 5ஆம் தேதி அடுத்தடுத்து தொடர்ந்து ஜம்மு, ஆப்கான் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவின் எல்லை நாடான ஆஃப்கானிஸ்தான் ஃபைசதாபாத்தில் காலை 6.10 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நடுக்கவியியல் மையம் தெரிவித்தது. இதன் மையமானது, 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அள்வுகோலில் 4.3 அளவாக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் வடக்கு பகுதியில், காலை 6.57 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நடுக்கவியியல் மையம் தெரிவித்தது. இதன் மையமானது, 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.9 அளவாக பதிவானது. பிப்ரவரி 28ஆம் தேதி ஆப்கான், தஜிகிஸ்தான், இந்தியாவின் மணிப்பூர், மேகாலயா உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.


ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 4.1 புள்ளி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல் தஜிகிஸ்தானின் முர்ஹொப் நகரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது. 


மணிப்பூர் மாநிலத்தில் உள்ள நோனி நகரில் அதிகாலை 2.46 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானது. நிலநடுக்கம் 25 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்தது.


இவை அனைத்தும் துருக்கியில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தை ஒப்பிடும் போது லேசானது. ஆனாலும் துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகை உளுக்கிய நிலையில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.