பசு மாடுகள் கன்றுக்குட்டியை ஈன்று போதும் அவை சற்று வித்தியாசமாக பிறந்தால் அது பலருக்கும் ஆச்சரியத்தை தரும். அந்தவகையில் ரஷ்யாவில் ஒரு இடத்தில் இரண்டு தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி மிகவும் வித்தியாசமாக இருந்துள்ளது. எனினும் கெடுவாய்ப்பாக அந்த கன்றுக்குட்டி மற்றும் பசு மாடு ஆகிய இரண்டும் திடீரென உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ரஷ்யாவின் காகசியா பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் பசு மாடு அண்மையில் ஒரு கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. அந்த கன்றுக்குட்டிக்கு இரண்டு தலை இருந்துள்ளது. ஆனால் அது பார்ப்பதற்கு கன்றுக்குட்டி போல் இல்லாமல் பன்றிக் குட்டியை போல் தோற்றத்துடன் இருந்துள்ளது. இந்த பிரசவம் குறித்து அந்த விவசாயி கால்நடை மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த புதிதாக பிறந்த கன்றுக்குட்டியின் மரபணுவை எடுத்து மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். 


அந்த முடிவுகள் வருவதற்கு முன்பாக அந்த கன்றுக்குட்டி இறந்துள்ளது. அத்துடன் பசு மாடும் இறந்துள்ளது. இந்தச் சம்பவம் அந்த விவசாயியை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சூழலில் அந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி கால்நடை மருத்துவர் ஒருவர், “இந்த கன்றுக்குட்டி தொடர்பாக அதன் உரிமையாளர் வந்து கூறிய போது நாங்கள் அதை பார்த்தோம். அது அந்த பசு ஈன்ற முதல் கன்றுக்குட்டி. அந்த கன்றுக்குட்டியை பார்த்தவுடன் அதில் சில மரபணு கோளாறு இருப்பதாக நாங்கள் சந்தேகித்தோம்.




அதைத் தொடர்ந்து அந்த கன்றுக்குட்டியின் மரபணுவை எடுத்து சோதனை செய்துபோது அது உறுதியானது. இங்கு ஏற்பட்டுள்ள சூழல் மாற்றத்தால் அந்த கன்றுக்குட்டியின் மரபணுவில் பிறழ்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அது சற்று கோளாறுடன் பிறந்துள்ளது. அத்துடன் அது சரியாக பிரசவம் அடைந்து பிறக்கவில்லை. எனவே அது உயிர்வாழ்வது கடினம் என்பதை நாங்கள் உணர்ந்தோம். அதேபோல் அந்த கன்றுக்குட்டி இறந்து விட்டது” எனக் தனது சோகத்தைக் கூறியுள்ளார். அடுத்தடுத்து தன்னுடைய பசுவும் அது ஈன்ற கன்றுக்குட்டியும் மரணம் அடைந்துள்ளதால் அந்த விவசாயி பெரும் சோகத்தில் உள்ளார். 


இதுபோன்று வித்தியாசமாக கன்றுக்குட்டி ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்தியாவிலும் பிறந்து இருந்தது. ராஜஸ்தான் மாநிலத்தின் தொல்பூர் மாவட்டத்தின் புரா சிக்ரவுடா கிராமத்தில் ஒரு கன்றுக்குட்டி 2 கழுத்து, 4 கண்கள், 4 காதுகள் மற்றும் 2 வாயுடன் பிறந்தது. இந்தக் கன்றுக்குட்டியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளது என்று கூறினர். அதேபோல் அந்த கன்றுக்குட்டி எந்தவித சிக்கலும் இல்லாமல் தற்போது வரை நன்றாக வளர்ந்து வருகிறது. 


மேலும் படிக்க: ஹிந்து மதத்துக்கு மாறினார், முதல் இந்தோனேசிய அதிபரின் மகள்..