Brazil : இரட்டை குழந்தைகளுக்கு இருவேறு தந்தை.. ஆனால் ஒரே அம்மா.. ஷாக் சம்பவம்!

பிரேசில் : ஒரே கருவில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு இருவேறு தந்தை இருப்பது தெரியவந்துள்ளது.

Continues below advertisement

பிரேசில் : ஒரே கருவில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு இருவேறு தந்தை இருப்பது தெரியவந்துள்ளது. ஒரே நாளில் இருவேறு நபருடன் உறவில் இருந்ததால் இது நிகழ்ந்துள்ளதாக இரட்டை குழந்தைகளின் தாய் தகவல் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

பிரேசிலின் கோயாஸில் உள்ள மினெரியோஸைச் சேர்ந்த அநாமதேய என்ற 19 வயதுடைய பெண், தனது இரட்டை குழந்தைகளுக்கு தந்தை யார் என்பதை அறிய விரும்பி, தனது குழந்தைகளுக்கு டிஎன்ஏ டெஸ்ட் மேற்கொண்டார்.  எட்டு மாதங்களுக்குப் பிறகு, தந்தை யார் என்பதில் அவளுக்கு சந்தேகம் இருந்ததால், அவள் சோதனை செய்ய முடிவு செய்துள்ளார். 

அதன் காரணமாக தனது குழந்தையில் தந்தை என கருதிய நபரின் டிஎன்ஏ பரிசோதனையில் பிறந்த இரட்டை குழந்தையில் ஒரு குழந்தைக்கு மட்டும் அவர் தந்தை எனவும், மற்றொரு குழந்தைக்கு வேறு ஒருவரின் டிஎன்ஏ இருந்ததை கண்டு அந்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதில் அதிசயம் என்னவென்றால், குழந்தையின் தந்தை வேறு நபர்களாக இருந்தாலும் அநாமதேய பெற்றெடுத்த இரட்டை குழந்தைகளும் ஒரே மாதிரியாக இருந்துள்ளது. இதுகுறித்து இரட்டை குழந்தைகளின் தாயான அநாமதேய உள்ளூர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “நான் வேறொரு ஆணுடன் உடலுறவு கொண்டது அப்போதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. அதன் காரணமாக நான் உடலுறவு கொண்ட வேறு நபரை பரிசோதனை மேற்கொண்டதில் அது பாசிட்டிவ் என வந்ததை கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். இது நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் குழந்தைகள் இரண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார். 

இந்த நிகழ்வு மிகவும் அரிதானது என்றாலும், அது முற்றிலும் சாத்தியமற்றது அல்ல. அறிவியல் ரீதியாக, இது ஹீட்டோரோபரன்டல் சூப்பர்ஃபெகண்டேஷன் என்று அழைக்கப்படுகிறது.

தாய் அநாமதேயவை பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் டாக்டர் துலியோ ஜார்ஜ் பிராங்கோ தெரிவிக்கையில், “ஒரே தாயிடமிருந்து இரண்டு முட்டைகள் வெவ்வேறு ஆண்களால் கருவுற்றால் இது சாத்தியமாகும். குழந்தைகள் தாயின் மரபணுப் பொருளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இதன் காரணமாக அவை வெவ்வேறு தொப்புள்கொடிகளில் வளர்கின்றன. இந்த மாதிரியான நிகழ்வுகள் ஒரு மில்லியனில் ஒருவருக்கு நிகழும்” என்று தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து அநாமதேய பேசுகையில், ”குழந்தைகளுக்கு தற்போது 16 மாதங்கள் ஆகியுள்ளது. தந்தைகளில் ஒருவர் இருவரையும் கவனித்துக்கொள்கிறார், எனக்கு நிறைய உதவுகிறார். அவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் கொடுக்கிறார்," என்று கூறினார்.

மேலும், இரட்டைக் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழில் ஆண்களில் ஒருவரின் பெயர் மட்டுமே இன்ஷியலாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola