பாம்பை பார்த்தல் படை நடுங்கும் என்று சிலர் கூறுவது வழக்கம். அந்த கூற்றுக்கு மாறாக இங்கு ஒரு பெண் பாம்பை தன்னுடைய செல்ல பிராணி போல் வளர்த்து வருகிறார். அதிலும் குறிப்பாக அந்த பாம்பை தன்னுடைய கழுத்தில் போட்டு கொண்டு இவர் நடமாடுகிறார். அந்தவகையில் தற்போது அவர் பாம்பு மீது அன்பு காட்டும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 


இதை ராயல் பைதான் என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பதிவிட்டுள்ளது. அந்தப் பதிவில் இருக்கும் வீடியோவில் பெண் ஒருவர் தன்னுடைய கழுத்தில் பாம்பை போட்டு உள்ளார். அதன்பின்னர் ஐ லவ் யூ என்று கூறிக் கொண்டு தன்னுடைய பாம்பிற்கு அவர் முத்தம் கொடுக்கிறார். அதன்பின்னர் மீண்டும் ஐ லைக் யூ என்று கூறி மேலும் ஒரு முறை பாம்பின் வாயில் முத்தம் கொடுக்கும் மாதிரி காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 


 






இந்த வீடியோவை பலரும் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். அத்துடன் இந்த வீடியோ தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் குறிப்பாக இவர் எப்படி எந்தவித பயமும் இல்லாமல் பாம்பை தன்னுடைய கழுத்தில் போட்டு கொண்டு முத்துமிடுகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலர் இது என்ன பாம்பா அவருடைய பெல்ட்டா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: ‛ஆம்பளையா... அடிச்சு விரட்டு...’ ஆண்களே இல்லாத கிராமம்.. பெண்கள் மட்டுமே அனுமதி... ஏன்... எதற்கு?