New York 3 year old Child dies fall: இடி மாதிரி சத்தம்..! 29 வது மாடியிலிருந்து விழுந்த குழந்தை - சோக சம்பவம்!

நியூயார்க்கில் உள்ள 29 வது மாடியிலிருந்து விழுந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Continues below advertisement

மாடியிலிருந்து விழுந்த குழந்தை:

Continues below advertisement

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த சனிக்கிழமை  29 வது மாடியிலிருந்து விழுந்த 3 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

குழந்தை உயிரிழப்பு:

விபத்து குறித்து அண்டை வீட்டார் தெரிவிக்கையில், உயரமான கட்டடத்திலிருந்து குழந்தை விழும்போது இடி போன்ற சத்தத்தைக் கேட்டதாக தெரிவித்தனர். அந்த நேரத்தில் வெளியே இருந்த குழந்தையின் தாய், என் குழந்தை, என் குழந்தை என்று கத்த தொடங்கியதாகவும் நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார். மறுபுறம், சிறுவனின் தந்தை, கீழே ஓடி, தனது மகனை தேடி ஓடியுள்ளார். பின்  3 வயது சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு அவன் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அடுக்குமாடி குடியிருப்பினர்:

விபத்து குறித்து உயரமான கட்டடத்தின்  23 வது மாடியில் வசிக்கும் காஸ்ட்ரோ கூறுகையில், ஒரு இடி போன்ற சத்தத்தை கேட்ட பிறகு, அவர் தனது பால்கனியில் வெளியே வந்ததாக கூறினார். "கீழே பார்க்கும் போது, அனைவரும், மஞ்சள் சட்டையுடன் இருந்த சிறுவனை பார்த்து கொண்டிருந்தனர். மேலும் 34 வது மாடியில் வசிக்கும் நிடியா கூறுகையில், மொட்டை மாடிக்கு வெளியே பார்க்கும் போது குழந்தையின் உடலை பார்த்தேன், டயப்பர்கள் மற்றும் டி-ஷர்ட்டில் அந்த சிறுவன் இருந்தான், மேலும், சில நாட்களுக்கு முன்பு குழந்தையின் தாயிடம், குழந்தைக்கு டயப்பர்கள் மற்றும் பால் வாங்கி கொடுத்தேன். அந்த குழந்தை மிகவும் அழகாக இருக்கும் என கவலையுடன் தெரிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola