ஆப்கானிஸ்தானின் பைசாபாத் பகுதியில் 5.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை ) காலை 5.1 என்னும் ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து கிழக்கே 89 கிலோமீட்டர் தொலைவில் 112 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் “ நிலநடுக்கம்: 5.1, 11-10-2022 அன்று ஏற்பட்டது, 04:53:06 IST, லேட்: 36.91 & நீளம்: 71.53, ஆழம்: 112 கிமீ, இடம்: 89 கிமீ ESE ஃபைசாபாத், தேசிய நில அதிர்வு மையம், ஆப்கானிஸ்தான்" என குறிப்பிட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
முன்னதாக கடந்த ஜூன் 22 அன்று தென்கிழக்கு ஆப்கானிஸ்தானைத் தாக்கிய நிலடுக்கம் அதன் அருகில் உள்ல பாக்டிகா, பாக்த்யா மற்றும் கோஸ்ட் மாகாணங்களில் ஏற்கனவே பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் பரவலான சேதத்தை ஏற்படுத்தியது.இதேபோல ஜூன் 22 ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்ட மைய பகுதியில் இருந்து , 3 கிமீ தொலைவில் உள்ள ஸ்பெரா மாவட்டத்தில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜூலை 18 ஆம் தேதி ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானது.