விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 8-வது சுற்று கால் மற்றும் வாய் தடுப்பூசிப் பணி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சிர் ஷேக் அப்துல் ரஹ்மான், தெரிவித்துள்ளார்.
தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 8-வது சுற்று கால் மற்றும் வாய் தடுப்பூசிப் பணி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சிர் ஷேக் அப்துல் ரஹ்மான், தெரிவித்துள்ளார்.
"கோமாரி நோய்": "கோமாரி நோய்" என்பது பிளவுபட்ட கால் குளம்புகள் உடைய பிராணிகளை தீவிரமாகத் தாக்கக் கூடிய ஓர் வைரஸ் / நச்சுயிரி நோயாகும். இதற்கு "கால் மற்றும் வாய் நோய்" மற்றும் "காணை நோய்" என்றும் அழைக்கப்படும். மாடு, ஆடு, பன்றி, மான், யானை போன்ற விலங்குகளைப் பாதிக்கும்.
நோயின் அறிகுறிகள்:
இந்நோய் கால்நடைகளில் கடுமையான காய்ச்சலை (104 C) உண்டாக்கும். மிக எளிதில் தொற்றக்கூடிய நோயாகும். பாதிப்புக்கு உள்ளான கால்நடைகளில் வாயிலிருந்து நுரை கலந்த உமிழ்நீர் நூல் போல் தொங்கிக் கொண்டு ஒழுகும். அசை போடும் போது "சப்பு கொட்டுவது" போல் சப்தம் உண்டாகும், வாயின் உட்பகுதி, ஈறுகள், நாக்கு, மடி, கால் குளம்புகளின் நடுப்பகுதி ஆகியவற்றில் கொப்புளங்கள் (Vesicles) தோன்றி உடைந்து புண்ணாகும். இதனால் ஏற்படும் வலி மற்றும் எரிச்சலினால், எச்சில் தொடர்ந்து உற்பத்தியாகி ஒழுகி, குளம் போல் காட்சியளிக்கும். தீவனம் உட்கொள்ளாது. சினை மாடுகளில் "கருச்சிதைவு"(Abortion) ஏற்படும். கன்றுகள் பாதிக்கப்பட்ட பசுக்களின் பாலை அருந்துவதால் கன்றுகளில் கண்டிப்பாக நோய் தாக்கி இறக்க நேரிடும்.
இந்த வகை வைரஸ் அல்லது நச்சுயிரிகள் மூளையை பாதிப்பதால், உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்கக் கூடிய ஓர் பகுதி தாக்கப்பட்டு, பாதிப்பிற்கு உள்ளான கால்நடைகளில் குறிப்பாக பசு மற்றும் எருமை இனங்களில் உடலின் வெப்ப நிலை உயர்ந்தே காணப்படும். இத்தகைய பாதிப்பினால் பசுக்கள் மற்றும் எருமைகள் எப்பொழுதும் அதிகமாக மூச்சு இரைத்தல் இருக்கும். பாதிப்புக்கு உள்ளான கால்நடைகளில் சினை பிடிக்காமல் பல மாதங்கள் வரை பிரச்சனைகளை ஏற்படுத்தும். சரிவரத் தீனியினை உட்கொள்ளாது. கன்றுகளிலும் நோய் பாதிப்பு ஏற்பட்டு இறந்து விடுவதால், பால் உற்பத்தி கணிசமான அளவில் பாதிக்கப்பட்டு "பொருளாதார நட்டத்தை" ஏற்படுத்தக் கூடிய ஓர் கொடிய நோயாகும்.
இந்த வைரஸ் / நச்சுயிரி 300 கி.மீ வேகத்தில் காற்றின் வழியே இதர கால்நடைகளைத் தாக்கும் வல்லமை கொண்டது. பனிக்காலங்களில் கால்நடைகளில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தக் கூடிய நோயாகும். ஆகையால் இந்த நோயை தடுப்பதற்காக,விழுப்புரம் கோட்டத்தில் 214200 கால்நடைகள் மற்றும் திண்டிவனம் கோட்டத்தில் 239500 என மொத்தமாக 453700 கால்நடைகளுக்கு 29.12.2025 முதல் துவங்கி தொடர்ச்சியாக 21 நாட்கள் கால்நடை பராமரிப்புத்துறையிலுள்ள 97 தடுப்பூசிப் போடும் குழுக்களின் மூலம் தேசிய விலங்கின நோய்கள் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் 8வது சுற்று கோமாரி நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் வாயிலாக 100% இலக்கு அடைந்திட விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் இத்தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது எனவே விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.