விக்கிரவாண்டியில் வரும் 10 ஆம் தேதி இடைத்தேர்தலையொட்டி, விழுப்புர மாவட்டத்தில் 4 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


விழுப்புர மாவட்டத்தில் வரும் 8, 9, 10, 13 ஆகிய தேதிகளில் மதுக்கடைகளை மூட உத்தரவு மாவட்ட ஆட்சியர் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்த நிலையில், இதனுடன் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் மட்டுமே இடைத்தேர்தல் நடந்தது.


அடுத்த சில நாட்களில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. அதன்படி ஜூலை 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உடனடியான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. கடந்த ஜூன் 14 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்கிய நிலையில் கடந்த 21 ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டது. வாக்கு எண்ணிக்கை 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 


இந்த இடைத்தேர்தலில் அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக தெரிவித்தது. அதேசமயம் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுகின்றனர். மும்முனை போட்டி நிலவுவதால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ளது.


இந்நிலையில், விழுப்புர மாவட்டத்தில் வரும் 8, 9, 10, 13 ஆகிய தேதிகளில் மதுக்கடைகளை மூட உத்தரவு மாவட்ட ஆட்சியர் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.