முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு நாள்; விழுப்புரம் அதிமுகவினர் அஞ்சலி

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவினர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தி அன்னதானம் வழங்கினார்.

Continues below advertisement

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். அப்போது அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் உறுதி ஏற்பு நிகழ்வும் நடைபெற்றது.

Continues below advertisement

முன்னதாக, இதுதொடர்பாக தனது X வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், எல்லோரும் எல்லாமும் பெற எந்நாளும் உழைத்த, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் அரசியல் ஆளுமை, நம் அனைவருக்கும் தலைவியாய் வாழ்ந்து, என்றென்றைக்கும் வழிகாட்டியாய்த் திகழும் இதயதெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி “அம்மா” அவர்களை அவர்தம் நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன். மாண்புமிகு இதய தெய்வம், புரட்சி தலைவி அம்மா அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவ படத்துக்கு, சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (05.12.23)  மலர் தூவி மரியாதை செலுத்தினேன். அம்மாவின் வழியில் மக்களால், மக்களுக்காக என்றென்றும் பயணிப்போம். அம்மா அவர்களின் நூற்றாண்டு கனவை நெஞ்சில் நிலைநிறுத்தி, மக்களுக்கான ஒரே  இயக்கம் அஇஅதிமுக என்பதை நம் செயலில் உறுதிப்படுத்தி, மக்கள் பணியே மகேசன் பணியாய்க் கொண்டு அயராது உழைப்போம் என குறிபிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் மறிந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு உணவு வழங்கினர். மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் திண்டிவனம் காந்தி சிலை அருகே பொதுமக்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும் அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல் விழுப்புரம் காந்தி சிலை அருகே பொதுமக்களுக்கு உணவு வழங்கினர்.  

Continues below advertisement