விழுப்புரம்: விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் பேட்டரி ஸ்கூட்டர் விற்பனை நிலையத்தில் திடீரென பேட்டரி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான ஸ்கூட்டரை தீயனைப்பு வீரர்கள் மீட்டனர்.


விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார்  எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்கூட்டர் நிறுவனத்தில் பணியாளர்கள் பணி செய்து கொண்டிருக்கும் போதே ஸ்கூட்டருக்கு மாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த புதிய பேட்டரிகள் இரண்டு திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டு புகைமண்டலமாக மாறியது. இதனையடுத்து அலறியடித்து கொண்டு வெளியே வந்த பணியாளர்கள் அருகிலுள்ள தீயனைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.


அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த விழுப்புரம் தீயனைப்பு துறையினர் தண்ணீரை அடித்து தீயை அனைத்தனர். தீயை அனைத்த பிறகும் பேட்டரிகளில் இருந்து வெளியே வந்த புகை ஸ்கூட்டர் விற்பனை நிலையம் முழுவதும் பரவி புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த தீ விபத்தில் தீயானது பரவுவதை தீயனைப்பு வீரர்கள் உடனடியாக கட்டுபடுத்தியதால் பல லட்சம் மதிப்பிலான புதிய ரக பேட்டரி ஸ்கூட்டர்கள் தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டன. இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண