"தேசிய பெண் குழந்தை விருது"


ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீர தீர செயல் புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி 24) அன்று "தேசிய பெண் குழந்தை விருது" வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு ஒரு இலட்சத்திற்கான காசோலையும், பாராட்டு பத்திரமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.


இவ்விருதுக்கு தகுதியுடையவர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்ட பெண் குழந்தையாக இருக்க வேண்டும்.


இவ்விருத்திற்கு தகுதிகளான கீழ்கண்டவற்றில் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும்:



  • பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல்

  • பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு

  • பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல்

  • வேறு ஏதாவது வகையில் சிறப்பான-தனித்துவமான செய்திருத்தல் சாதனை


பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், 101 நம்பிக்கைகள் ஆகிவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள். கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல் ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல்.


மேற்காண் விருதினை பெற உரிய முன்மொழிவுகளை முதன்மை கல்வி அலுலவர். மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலர். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர். காவல்துறை மற்றும் குழந்தைகளுக்காக பணிபுரியும் சிறந்த தொண்டு நிறுவனங்கள் ஆகியோர்களிடம் விபரமறிந்து பரிந்துரைக்கலாம்.


பரிந்துரையில் குழந்தையின் பெயர். தாய்-தந்தை முகவரி, ஆதார் எண், புகைப்படம், ஆகியவற்றுடன் குழந்தை ஆற்றிய அசாதாரண வீர, தீர செயல் மற்றும் சாதனைகள் ஆகியவற்றின் ஒரு பக்கத்திற்கு மிகாத குறிப்பு மற்றும் அதற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட வேண்டும்.


விண்ணப்பிக்கும் வழிமுறை


எனவே இவ்விருதுக்கு தகுதியானவர்கள், தமிழக அரசின் விருதுகள் https://awards.tn.gov.in  இணையதளவழியாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதி நாள் 30.09.2024 ஆகும். மேலும் இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் விழுப்புரம் மாவட்ட சமூகநல அலுலவகத்தில் கையேடாக (Booklet) தயார் செய்து தமிழ் (ம) ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா 3 நகல்கள் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.