புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு பள்ளியில் கோடை விடுமுறை மே 1 முதல் துவங்குகின்றது என்று அம்மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.


கோடை விடுமுறை 


புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகள் இந்த கல்வியாண்டு முழுமையாக மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.


வரும் கல்வியாண்டு முதல் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் விதிமுறைகளின்படி பள்ளிகள் 2024 ஏப்.1 முதல் 2025 மார்ச் 31ந்தேதி வரை நடைபெறும் என்றும், மார்ச் 24 முதல் 31ந்தேதி வரை மற்றும் மே.1ந் தேதி முதல் 31ந் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டு ஜுன் 3ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


மாணவர் சேர்க்கை 


இதனையடுத்து வரும் 25ந் தேதி (மார்ச்) முதல் அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை துவங்கப்படுகின்றது.


புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தமிழக அரசின் பாடத்திட்டத்தை அமல்படுத்தி வந்த புதுச்சேரி அரசு, தற்போது அந்த பாடத்திட்டத்தை கைவிட முடிவு செய்திருக்கிறது. இரண்டாவதாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்துக்கு மாறப்போவதாக அறிவித்திருக்கிறது. தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது.


இந்தியக் கல்வி முறை என்பது CBSE, CISCE, NIOS எனும் 3 மத்திய அரசு கல்வி வாரியங்களையும், தமிழ்நாடு போன்று 30-க்கும் மேற்பட்ட மாநில அரசு கல்வி வாரியங்களையும் கொண்டுள்ளது. அதோடு, தனியார் பள்ளிகளின் கல்வி வாரியமான ICSE, சர்வதேச கல்வி வாரியமான IB, CIE ஆகியவையும் இந்தியாவில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.