Puducherry Power shutdown: புதுச்சேரியில் 05.08.2025 வெங்கட்டா நகர், திருபுவனை மின்பதை மற்றும் சுற்றுவட்டார மின்பாதை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் (காலை 10:00 மணி முதல் மாலை4 :00 மணி வரை) அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முழுவதும் பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோருக்கு மின் விநியோகம் செய்யும் பணியை புதுவை மின் துறை செய்து வருகிறது. இந்த மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் மின்துறை சுழற்சிமுறையில் மாதாந்திர மின் பாதை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். அத்தகைய சமயங்களில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி
ரங்கவிலாஸ் தோட்டம், வசந்த் நகர், சூரிய காந்தி நகர், எழில் நகர், டி.வி நகர், சங்கரதாஸ் சுவாமிகள் நகர், ஜெகராஜ் நகர், கணபதி நகர், செந்தாமரை நகர், விஸ்வநாதன் நகர், மகாத்மா காந்தி வீதி, சாமி பிள்ளைத் தோட்டம், லுார்து நகர், கென்னடி கார்டன், தெபேசன்பேட் மற்றும் வெள்ளவாரி வீதி. எல்லையம்மன் கோயில் தோப்பு, காளியம்மன் கோயில் தோப்பு, ஜெயராம் செட்டியார் தோட்டம் (4 -5 குறுக்கு தெரு), தாமரை நகர், ராஜ ராஜன் வீதி, முருகசாமி நகர், ஈசுவரன் கோயில் தோப்பு, இந்திரா நகர், பாரதிதாசன் வீதி, பிரன்சுவா தோப்பு. ஏழை பிள்ளையார் தோப்பு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டாது.
திருபுவனை துணை மின் நிலையம்
திருபுவனை துணை மின் நிலையம் என்பது புதுச்சேரி மாநிலத்தின் திருபுவனை பகுதியில் உள்ள ஒரு துணை மின் நிலையமாகும். இது அப்பகுதியில் மின் விநியோகத்தை நிர்வகிக்கிறது. அடிக்கடி பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும்.
திருபுவனை துணை மின் பாதையில் பராமரிப்பு பணி: திருபுவனை, குச்சிபாளையம், சிலுக்காரிபாளையம், பி.எஸ்.பாளையம், வாதானுார், சோம்பட்டு மற்றும் மண்ணாடிப்பட்டு, கலிதீர்த்தால்குப்பம், ஆண்டியார்பாளையம் மற்றும் திருபுவனை (பகுதி) ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைபடும்.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.
துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
- துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
- துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
- துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
- மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
- தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
- பாதுகாப்பு சோதனை
- இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை