புதுச்சேரி: லாஸ்பேட்டை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (29-08-2024) பல இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதையொட்டி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என மின்துறை அறிவித்துள்ளது.


நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள்:


மின்தடை நேரம் : காலை 10 மணி முதல் 3 மணி வரை


பொதிகை நகர், வாசன் நகர், அசோக் நகர், நேருவில் நகர், அவ்வை நகர், ராஜாஜி நகர், நாவற்குளம், அன்னை நகர், குறிஞ்சி நகர் விரிவாக்கம், லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பு, சாந்தி நகர், லாஸ்பேட்டை கல்வி நிறுவனங்கள், உயர் மின் அழுத்த நுகர்வோர்கள், பிப்மேட் அலுவலகம், ஏர்போர்ட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.


ECR மின் பாதை


நேரம் : காலை 10 மணி முதல் 3 மணி வரை


இ.சி.ஆர். மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை (ஒரு பகுதி), VVP. நகர், தட்டாஞ்சாவடி (ஒரு பகுதி), கவுண்டன்பாளையம், காந்தி நகர் (ஒரு பகுதி), கஸ்தூரிபாய் நகர், பேட்டையன் சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.


கருவடிக்குப்பம் மின் பாதை 


நேரம் : காலை 10 மணி முதல் 3 மணி வரை


கருவடிக்குப்பம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 10 மணி முதல் 3 மணி வரை பாக்குமுடையான்பேட், ஆனந்தபுரம், கொட்டுப்பாளையம் (ஒரு பகுதி), வடக்கு இ.சி.ஆர்., கிரீன் கார்டன், ஸ்ரீராம் நகர், ஜெயராம் கார்டன், கருவடிக்குப்பம், கோரிமேடு காவலர் குடியிருப்பு, பூபாலன் நகர், ஜிப்மர் குடியிருப்பு, சுப்பையா நகர் (ஒரு பகுதி), மகாவீர் நகர், பாரதி நகர் (ஒரு பகுதி), விஷ்ணு நகர், சாமிபிள்ளைத்தோட்டம், லெனின் நகர், ஷண்முகா நகர், நாகம்மாள் நகர், லட்சுமி நகர் விரிவாக்கம், வள்ளலார் நகர், ஆனந்தா நகர், நெசவாளர் நகர், மேயர் நாராயணசாமி நகர், சப்தகிரி நகர்ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.


இண்டஸ்டிரியல்-II மின் பாதை


நேரம் : காலை 10 மணி முதல் 3 மணி வரை


ஏரிப்பாக்கம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் இண்டஸ்டிரியல் 2 மின் பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக கல்மண்டபம் (ஒரு பகுதி), பண்டசோழநல்லூர் (ஒரு பகுதி), நெட்டப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது என புதுச்சேரி மின்துறை தெரிவித்துள்ளது.