விழுப்புரம்: முகையூர் பகுதியில் திமுக நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில்  "சேராத இடம் தன்னில் சேர்ந்தாயோ" என்ற பாடலை பாடி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்தார் முன்னாள் அமைச்சர் பொன்முடி.

விழுப்புரம் மாவட்டம் முகையூர் பகுதியில் திமுக நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சர்ருமான பொன்முடி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி.,

உலகத்திலேயே மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கிய ஒரே முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளதாகவும் அனைத்து பெண்களும் படிக்க வேண்டும் என்பதற்காக புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டம் மூலம் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கும் முதல்வராக ஸ்டாலின் உள்ளதாக தெரிவித்தார். பெண்களை படிக்க வைப்பது தான் திராவிட மாடல் ஆட்சி அனைவரும் சமம் என்பதை தான் திடாவிர மாடல் அரசு செய்து வருகிறது.  கல்வியை வளர்க்க அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.  பத்தாண்டு ஆண்டு கால அதிமுக ஆட்சியில், நான்கு ஆண்டுகள் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் கல்விக்காகவும், விவசாயிகளுக்கு, பெண்களுக்கு எந்த திட்டமும் கொண்டுவரப்படவில்லை என்றும்

'சேராத இடம் தன்னில் சேர்ந்தாயோ என்ற பாடல் வரிகளை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்தார். அதிமுக சேராத நபர்களுடன் தற்போது கூட்டணி வைத்துள்ளது. இதனால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாது இனி எந்த தேர்தலிலும் வெற்றி பெறாது வருகின்ற சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாது அனைத்து தேர்தலிலும் நிரந்தர முதலமைச்சர் ஆக தளபதி திகழப் போகிறார் என்று பேசினார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.