விழுப்புரம்: கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகளவிலானோர் கார்களில் பயணிப்பதால் விழுப்புரம் ஜானகிபுரத்தில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் மேம்பாலம் அருகே வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.


கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை

 

நாளை மறுநாள் திங்கட்கிழமை 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை. அதோடு சனி, ஞாயிறு என்று தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருவதால், கிறிஸ்துமஸ் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு தென் மாவட்டங்கள், மற்றும் கேரள மாநில மக்கள் அதிக அளவில், சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். தென் மாவட்டம் கடுமையான மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த போதிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ளவர்கள், சொந்த ஊர்களுக்கு செல்வதில் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.


விடுமுறையின் காரணமாக சென்னையிலிருந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சென்னையிலிருந்து தென்மாவட்டங்களில்  உள்ள சொந்த கிராமங்களுக்கு செல்ல அதிகமானோர் காரில் பயணித்து செல்கின்றனர். இதன் காரணமாக விழுப்புரம் அருகேயுள்ள ஜானகிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் நடைபெறும் இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதிகமாக கார்களில் திருச்சி, மதுரை, கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கு செல்வதால் மேம்பால பணிகள் நடைபெறும் இடத்தில் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. போக்குவரத்து நெரிசலையடுத்து மேம்பால பணிகள் முடிவடைந்த ஒருபகுதியின் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. ஒரே நேரத்தில் விழுப்புரத்திற்கு செல்லக்கூடிய வாகனங்கள் இவ்வழியாக பயணிப்பதால் போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.