கார்த்திகை மாதம் என்றாலே நினைவுக்கு வருவது கார்த்திகை தீபத்திருநாள் தான். கார்த்திகை தீபத்தன்று வீடுகளில் மற்றும் கோயிலில் விளக்கேற்றி கொண்டாடுவார்கள். கார்த்திகை மாதத்தில்‌ கார்த்திகை நட்சத்திரமும்‌, பெளர்ணமியும்‌ ஒன்றாக வரக்கூடிய நன்னாளில்‌ திருக்கார்த்திகை தீபம்‌ கொண்டாடப்படுகிறது.


உலக பிரசித்தி பெற்ற கோயிலாகும் பஞ்சபூத தளங்களில் அக்னி தலமாக விளங்கக் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திக்கை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.


கார்த்திகை நன்னாளில் திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டு இருக்கும். அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து மாலையில் மலை மேல் மகாதீபம் ஏற்றப்படும்.


கார்த்திகை தீபம் கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. அதையொட்டி தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் கோவில் 5-ஆம் பிரகாரத்தில் சுவாமி பவனி நடைப்பெற்று வருகிறது. வரும் டிசம்பர் 6ஆம் தேதி மாலை மகா தீபம் ஏற்றப்படும். 


கார்த்திக்கை தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் பரணி தீபம்‌ , அண்ணாமலையார்‌ தீபம்‌ (மகா தீபம்‌) விஷ்ணு தீபம்‌, உள்ளிட்ட 5 தீபங்கள் ஏற்றப்படும். டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலையில்‌ பரணி தீபம்‌ அண்ணாமலையார்‌ கருவறையில்‌ ஏற்றப்பட்டு, பின்னர்‌ அர்த்த மண்டபத்தில்‌ ஐந்து தீபங்களாக இவை காட்டப்படும்‌.  


இவை டிசம்பவர் 6-ஆம் தேதி அன்று  மாலை 6 மணிக்கு, சிவனே மலையாக காட்சி தரும் 2,668 அடி உயர மலை உச்சியின் மீது மகா தீபம் ஏற்றப்படும்.


திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்கு தாம்பரத்தில் இருந்து டிசம்பர் 6, 7 தேதிகளில் ரயில்கள் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் காலை 8:40க்கு புறப்படும் சிறப்பு ரயில் பிற்பகல் 12:15க்கு திருவண்ணாமலையை சென்றடையும்.


செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருத்துவர், திண்டிவனம், விழுப்புரம், திருகோவிலூரில் ரயில் நிற்கும். திருவண்ணாமலையிலிருந்து பிற்பகல் 1:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மாலை 5:30 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.


அதேபோல, 2,700 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பக்தர்களின் வருகையை பொறுத்து பேருந்துகளில் எண்ணிக்கை அதிகரிப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வரும் டிசம்பர் 6ஆம் தேதி மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்றைய தினம், மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் உட்பட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.


அவற்றில் மருத்துவமனை, வங்கி, காவல் நிலையம், தபால் நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.