அதிமுகவிற்கு எந்த பாரமும் இல்லை; இனி எவருடைய பாவத்தையும் சுமக்க வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை. அதிமுக தெளிவாக உள்ளதாகவும் குண்டர்கள் உள்ள கட்சியாக திமுக உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். 


விழுப்புரம் அருகேயுள்ள பிடாகத்தில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி  மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் ”அதிமுக 2 கோடி தொண்டர்களை வைத்துள்ள மிகப்பெரிய கட்சியாக உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போன்று எத்தனை பேர் வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது. குண்டர்கள் உள்ள கட்சி திமுக தான். அதில் உள்ளவர்கள் வசூல் செய்து கொடுக்கும் பணியில்  ஈடுபட்டுள்ளனர்.


இந்தியா கூட்டணியில் எது எது சிதறபோகும் என்று தெரியவில்லை. பொங்கல் பண்டிகைக்கு பிறகு நாடாளுமன்ற தேர்தல் வரப்போவாதால் அதிமுகவினர் தயாராக இருக்க வேண்டும். அதிமுகவிற்கு எந்த பாரமும் இல்லை. இனி எவருடைய பாவத்தையும் சுமக்க வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை. அதிமுக தெளிவாக உள்ளது. இக்கட்சியில் எந்த பதவி வேண்டுமானாலும் தொண்டர்கள்  கேட்கலாம், சீட்டும் கிடைக்கும் வெற்றியும் கிடைக்கும். இது திமுக போன்ற எந்த கட்சியிலும் நடைபெறாது” என தெரிவித்தார்.


திமுகவில் ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என்று அடுத்தடுத்து என குடும்ப அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களின் பெயரிலையே நிதி என்று பெயர் வைத்து அவர்களுக்கு பணம் மட்டும் தான் முக்கியம் என்பதை காட்டுவதாக கூறினார். 



”தொண்டர்கள் அதிமுகவில் இருந்து விலகுவதில்லை. இக்கட்சியில் அமைச்சராக இருந்தவர்கள், முதலமைச்சராக இருந்தவர்கள், எம்எல்ஏவாக இருந்தவர்கள் தான் விலகி சென்றுள்ளனர். தேர்தல் வரக்கூடிய சூழலில் தான் மகளிருக்கான  இடஒதுக்கீடு அறிவிக்கபட்டுள்ளது. மகளிர், இளைஞர் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த அரசியல் கட்சியினரும் அரசியல் செய்ய முடியாது” என தெரிவித்தார்.  திமுக ஆட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் திமுக ஆட்சியில் அனைத்து பொருட்களுக்கு விலையேற்றம் அதிகரித்து மக்களை பற்றி சிந்திக்காத பித்தலாட்ட அரசாக திமுக ஆட்சி உள்ளது தெரிவித்துள்ளார்.