கடலூர் அடுத்த வடக்கு ராமாபுரம்  எஸ்.புதூர் கிராமத்தில் பெரியார் நினைவு சமுத்துவபுரம் அமைந்துள்ளது இங்கு 100 வீடுகள் உள்ளது. இந்த நிலையில் சமுத்துவபுரம் பின் பக்கம் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டி தர தனியார் தொண்டு நிறுவனம் 2012 ஆம் ஆண்டு முன் வந்தது அதன் பேரில் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் 2013 ஆம் ஆண்டு இலங்கை தமிழர்கள் மறுவாழ்வுக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்ட. மொத்தம் 130 வீடுகள் கட்டப்பட்டது. அந்த வீடுகள் சரியில்லை தங்களை மீண்டும் அகதிகள் போல் அடைத்து வைக்கும் நிலையில் வீடுகள் உள்ளது என கூறி அதில் இலங்கை தமிழர்கள் குடியேற மறுத்து விட்டனர். 

 



 

இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பாழடைந்து உள்ளது. இந்த நிலையில் தற்போது அந்த இடத்தில் 130 வீடுகள் இருந்த நிலையில் அவ்வப்போது சமுக விரோத செயல்கள் அந்த வீடுகளில் நடைபெறுவதாக தொடர் குற்றசாட்டு எழுந்தது மேலும் வீட்டில் இருந்த மின்சார வையர்கள் காணமால் போகிறது என புகார்கள் எழுந்தது.ஆகையால் 130 வீடுகளில் பல வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் 50 வீடுகள் மட்டும் தற்போது பாழடைந்து அந்த பகுதியில் உள்ளது. 

 



 

இந்த நிலையில் பெரியார் நினைவு சமுத்துவபுரம் பகுதியில் உள்ள இளைஞர் சிலர் பாழடைந்த வீட்டிற்கு சென்று கேம் விளையாடுவது, தூங்கவது போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது, அந்த வகையில் இன்று மதியம் பாழடைந்த வீட்டிற்கு சென்ற சுதீஷ்குமார், வீரசேகரன்,புவனேஷ் ஆகிய மூன்று 17 வயது சிறுவர்கள் கேம் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது அப்போது பாழடைந்த அந்த வீடு திடீரென முற்றிலும் இடிந்து விழுந்து உள்ளது சத்தத்தை கேட்டு அதிர்நத அந்த பகுதி மக்கள், இடிந்த வீட்டில் சிக்கி கொண்ட 3 பேரை மீட்க துவங்கினர் பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 3 சிறுவர்களையும் மீட்டு கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 



 

அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வீரசேகரன், சுதீஷ் குமார், ஆகியோர் உயிரிழந்தனர், புவனேஷ் எனும் சிறுவன் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது சம்பவ இடத்திற்கு கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர் பின்னர் விசாரணை நடத்தி மீதமுள்ள வீடுகளையும் பார்வையிட்டனர் அருகாமையில் உள்ள பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் காவல் துறையினர் சார்பில் சிறுவர்கள் ஆன்லைன் வகுப்பிர்க்காக தான் அந்த கட்டடத்திற்கு சென்றதாக கூறப்பட்டது.

 

மேலும், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இந்த கட்டட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்து உள்ளார், இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தாருக்கு வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொண்ட அவர், காயமடைந்த சிறுவனுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு.