Just In

Koovagam; கூவாகத்தில் அரவான் சாமி கண் திறத்தல்...ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் திருமணம்!

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற இந்தியா உத்தரவு

கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை.. வாய் விட்டு வாங்கி கட்டிக்கொண்ட பாஜக அமைச்சர்.. என்னா அடி

போர் நிறுத்தம் - யார் சொல்றது உண்மைன்னே தெரியலையே.?! ட்ரம்ப் சார் நீங்க இப்படி பண்ணலாமா.?

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு காலதாமதமாக வந்துள்ளது வருத்தம் அளிக்கிறது - அன்புமணி ராமதாஸ்
ஏசி ஒர்க் ஆகல.. ஏர் இந்தியா விமானத்தால் கடுப்பான பயணிகள்.. இனியும் பொறுக்க முடியாது
விஜயகாந்த் ஆன்மா சாந்தியடைய மொட்டையடித்து காரியம், 5000 பேருக்கு அன்னதானம்
முன்னதாக அக்கட்சியினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் இணைந்து அந்த கிராமம் முழுவதும் வீதி வீதியாக அமைதி ஊர்வலம் நடத்தினர்.
Continues below advertisement

விஜயகாந்த் படம் முன்பு தேமுதிகவினர்
வாணியம்பாடி அருகே மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆன்மா சாந்தியடைய மொட்டையடித்து காரியம் செய்து அமைதி ஊர்வலம் நடத்திய தேமுதிகிவினர். விஜயகாந்த் படம் முன்பு வித விதமான உணவு படையல் வைத்து பூஜை 5000 பேருக்கு அன்னதானம் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கபேட்டை கிராமத்தில் மறைந்த நடிகரும்,தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்களின் ஆன்மா சாந்தியடைய தேமுதிக மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன்,தலைமை பொதுகுழு உறுப்பினர் கில்லிகுமார் ஆகியோர் தலைமையில் தேமுதிகிவினர் காரியம் செய்தனர்.
அதில் விஜயகாந்த் ஆன்மா சாந்தியடைய தேமுதிக நிர்வாகிகள்,தொண்டர்கள் மொட்டையடித்து விஜயகாந்த் படத்திக்கு முன்பு வித விதமான உணவு மற்றும் பலகாரங்கள் படையல் வைத்து பூஜை செய்தனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் சுமார் 5000 பேருக்கு பிரியாணி வழங்கினர்.
இதற்கு முன்னதாக அக்கட்சியினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் இணைந்து அந்த கிராமம் முழுவதும் வீதி வீதியாக அமைதி ஊர்வலம் நடத்தினர். இதில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.