டோல்கேட் கட்டணத்தினால் தான் விலைவாசிகள் உயர்கிறது - விக்கிரமராஜா

திருவண்ணாமலை மாவட்டத்தில் முடிக்கப்படாத சாலைகள் அனைத்தும் விரைந்து முடிக்க வேண்டும். டோல்கேட் கட்டணத்தினால் தான் விலைவாசிகள் உயர்கிறது - வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா

Continues below advertisement

திருவண்ணாமலையில் 37-வது வணிகர் சங்கங்களின் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், வரும் மே 5ம் தேதி ஈரோட்டில் வணிகர் தின மாநில மாநாடு நடைபெற உள்ளதாகவும், வணிகர் உரிமை முழக்க மாநாடு என்ற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது என்றும், மத்திய மாநில அரசுகள் சாமானிய வியாபாரிகளை காப்பாற்றும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என அந்த மாநாட்டில் பிரகடன தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாலைகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், மத்திய அரசு சாமானிய வணிகர்களை வேறு பார்வையில் கட்டாயம் பார்ப்பதாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்வதை மதுரை நீதியரசர்கள் கண்டித்துள்ளனர் என்றும், சாமானிய வியாபாரிகளை ஒரு பார்வையாகவும், கார்ப்பரேட் வியாபாரிகளை ஒரு பார்வையாகவும் மத்திய அரசு பார்ப்பதாக கூறினார்.

Continues below advertisement

 

 


மேலும் ஆன்லைன் வர்த்தகத்தால் சாமானிய வியாபாரிகள் தடுமாறி வருவதாகவும், ஆன்லைன் சூதாட்டத்தை ஆன்லைன் தடை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும், ஆளுநர் உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும், குறிப்பாக டோல்கேட் கட்டண உயர்வால் வியாபாரிகள் மட்டுமல்லாது சாமானிய பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மத்திய அமைச்சர் நிதின்கட்கரி காலாவதியான டோல்கேட்கள் மூடப்படும் என்று அறிவித்தது வெறும் அறிவிப்பாகவே உள்ளதாகவும், உடனடியாக காலாவதியான டோல்கேட் அனைத்தையும் மூடி சாமானிய பொதுமக்களை காக்க வேண்டும் எனவும், டோல்கேட் விலை உயர்வால் விலைவாசிகள் அனைத்தும் உயர்ந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

 


 

வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் இல்லை என்றால் தொழில் நிறுவனங்கள் சுமார் 70 விழுக்காடு அளவிற்கு இங்கு உள்ள தொழில் நிறுவனங்களில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபடுவதாகவும், சிலர் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும், தமிழக அரசும் தமிழக காவல்துறையும் வட மாநில தொழிலாளர்களுக்கு முழு பாதுகாப்பு அளித்து வருவதாகவும், நகராட்சி பேரூராட்சி உள்ளாட்சி ஆகியவற்றில் உள்ள கடைகளில் வரி உயர்வை முறைப்படுத்த தனியாக குழு அமைத்துள்ளதாகவும், அந்த குழு ஆவின் அடிப்படையில் கடைகளில் வாடகை உயர்வை முறையாக தீர்மானிக்கப்படும் என்றும், குறிப்பாக வணிகர்களுக்கு செஸ் வரியை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளதாகவும், வருமானவரி துறையினர் வணிகர்களின் வாகனங்கள் நிறுத்தி சோதனையை நடத்தி வருவதை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று வணிகர்கள் பாதிக்காத வண்ணம் செயல்பட வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுப்பதாக கூறினார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola