திருவண்ணாமலை அருகே தண்டரை அரசு பள்ளியில் மதிய உணவை சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில், பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால் பள்ளி மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. 


அரசு உயர்நிலைப் பள்ளியில் மதிய உணவில் பல்லி விழுந்தது அறியப்படவில்லை. உணவு சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த தண்டரை கிராமத்தில் தண்டரை கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் தண்டரை, சு.நல்லூர் ஆகிய இரண்டு கிராமத்திலிருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியில் மதிய உணவாக சர்க்கரைப் பொங்கல் செய்து மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கியுள்ளனர். சில மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சக்கரை பொங்கலில் பல்லி இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனை  பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் எடுத்து சென்று காண்பித்துள்ளனர்.


இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர் மாணவர்கள் யாரும் சர்க்கரை பொங்கலை சாப்பிட வேண்டாம் எனக்கூறிவிட்டு அங்கு இருந்து 5 மாணவர்களை மட்டும் அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்தில் 80 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது, அப்போது உடனடியாக பள்ளியின் ஆசிரியர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து 5 ஆம்புலன்ஸ்கள் மூலம் தண்டரை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வரவைக்கப்பட்டு உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


மதிய உணவில் பல்லி இருந்தது அறியாமல் உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர், அது மட்டும் இல்லாமல் வாந்தி மயக்கம் ஏற்பட்ட மாணவர்கள் உடல் நிலையில எந்த பாதிப்பும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


இச்சம்பவம் குறித்து வெறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், அதுமட்டுமில்லாமல் வாந்தி மயக்கம் அடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் தகவல் அறிந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பதற்றத்துடன் வந்து கொண்டிருக்கின்றனர்.