திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சுப்பிரமணி கோவில் தெருவை சேர்ந்த டிரைவர் செந்தில்குமார் இவருடைய மனைவி உமாராணி இந்த தம்பதியினருக்கு மதன் வயது (19) , அருண் வயது ( 16) என்ற 2 மகனும் ஜீவிதா என்ற ஒரு மகளும் உள்ளனர்.


செந்தில்குமார் தனியார் பேருந்து நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் மதன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஊர்சுற்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது. மதன் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகின்றனர்.போதைக்கு பழக்கத்துக்கும் மதன் அடிமையாகியுள்ளார்.


நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பழக்கத்தையும், கஞ்சா புகைப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார் மதன். மேலும் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மதன் குடிபோதையில் வீட்டில் தகராறு செய்து குடிப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். இதேபோன்று கடந்த வாரம் வழக்கம்போல் தாய் உமாவிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார் அதற்கு உம்மா பணம் தர மறுத்துள்ளார் இதனால் ஆக்ரோஷமடைந்த மதன் தாய் உமாவின் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார் வயிற்று வலியால் துடித் துடித்த உமா மருத்துவமனையை சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.


 




 இந்நிலையில் நேற்று இரவு வீட்டுக்கு வந்த மதன் வழக்கம் போல் குடிக்க பணம் கேட்டு தனது தாய் உமாராணியிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அப்போது உமாராணி எண்ணிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் மீண்டும் தாய் உமாவை தாக்கிய மதன் அவர் வைத்திருந்த 500 ரூபாயை பறித்து சென்றார்.


நடந்த சம்பவம் குறித்து உமாராணி அழுது கொண்ட தனது கணவர் செல்வகுமாரிடம் தகவலை தெரிவித்தார். உடனே வீட்டிற்கு வந்த செல்வகுமார் மதனை அழைத்து கண்டித்துள்ளார். இதனால் தந்தை செல்வகுமாருக்கும் மகன் மகனுக்கும் இடையே தகராறு ஏற்படுகின்றது. போதையில் இருந்த மதன் தந்தை செந்தில் குமாரை தாக்க அம்மிக்களை தூக்கி வந்துள்ளார். இதனால் பதட்டம் அடைந்த செந்தில் குமார் மகனின் கையில் இருந்த அம்மிகல்லை பிடுங்கினார். பின்னர், மகன் மதனை கீழே தள்ளி மகன் தலையின் மீது அம்மி கல்லால் தாக்கினர். இதில் நிலைகுலைந்த மதன் சம்பவடத்திலேயே மயங்கி‌னார். 


 




பின்னர் செந்தில்குமார் அந்த இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார். இதனையொடுத்து மயங்கி இருந்த மதனை அருண் மற்றும் அருணின் நண்பர் மோகன் ஆகியோர் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஆனால்,  மதன் சிகிச்சை பலனின்றி மதன் இறந்துவிட்டார்.


மேலும் மதனின் தாய் உமாரணி கொடுத்த புகாரின் பேரில் ஆரணி நகர காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து தப்பியோடிய செந்தில்குமாரை கைது செய்து ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மது போதை நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்பதை இந்த சம்பவம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆரணியில் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த மகனை ஆத்திரத்தில் அம்மிகல்லால் தாக்கி தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.