கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, இம்மாவட்டத்தின் பல்வேறு வரலாற்றுத்
தடயங்களைக் கண்டறிந்து பொதுமக்களுக்கு வெளிப்படுத்தி வருகிறது. இதைதொடர்ந்து பாறை ஓவியங்கள் பி.ஜி.துர்க்கம் என்றழைக்கப்படும் பாலகொன்றாயதுர்க்கம் பெருமாள் கோயில் மலையடிவாரத்தில் உள்ள பெரிய பாறையில் கல்வெட்டு இருப்பதைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதனை ஆய்வு செய்தபின் அருங்காட்சியகம் காப்பாட்சியர்கள் கூறியது, இந்த ஒரு பெரிய பாறை முழுவதும், ஒரே கல்வெட்டு மூன்று இடங்களில் தொடர்ச்சியாக வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு ஒய்சாள மன்னர்களில் கடைசி மன்னனான மூன்றாம் வீர வள்ளலானின் காலத்தைச் சேர்ந்தது. இவரது காலத்திய கல்வெட்டுக்கள் இம்மாவட்டத்தில் இல்லை என்று கருதப்பட்டு வந்த நிலையில் தற்போது அத்திமுகம், மல்லப்பாடி மற்றும் பி.ஜி.துர்க்கம் என மூன்று கிராமப்பகுதியில் வயல்வெளி பகுதிகளில்  மூன்றாம் வள்ளலார்  கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளன



இந்த கல்வெட்டுக்கலில் முதலாவதாக பி.ஜி.துர்க்கக் கல்வெட்டின் தொடக்கத்தில் பெரிய அளவிளான கோட்டு உருவங்கள் காட்டப்பட்டுள்ளன. நடுவில் சக்கரமும், இடப்பக்கம் மனித உருவிலான கண்டப்பேருண்ட பறவையும், வலப்பக்கம் புலியின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. அதன்  அருகில் குடை,சாமரம், சூரியன், சந்திரன் ஆகியவையும் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் முடிவில், பூர்ணகும்பம் மற்றும் குத்துவிளக்குகள் வரையப்பட்டுள்ளன.


இக்கல்வெட்டின் தொடக்கத்தில், மூன்றாம் வல்லாளனின் மெய்கீர்த்தி என்னும் அவனது புகழை எடுத்துக்கூறும் பகுதி உள்ளது. அந்த மன்னனது ஆட்சியின்கீழ் இப்பகுதியை சிங்கைய்ய நாயக்கர் மற்றும் இவர் தம்பி வல்லப்ப தெண்ணாயக்கர் ஆகியோர் ஆண்டு வந்துள்ளனர் . இவர்கள் நல்ல உடல் நலத்தோடு வெற்றிகள் பல ஈட்டவேண்டி நம்பிநாயக்கன் என்பவன், திருவேங்கட திருமலையில் உள்ள ஸ்ரீசேனாபதி மடத்துக்கு, இங்குள்ள நரசிங்கநல்லூர் என்ற ஊரை நல்லெருது, நற்பசு, குழிசுங்கம், கட்டளை ஆயம், தட்டார்பாட்டம் முதலான அனைத்து வரிகளையும் நீக்கி தானமாக அளித்த செய்தியை இக்கல்வெட்டு விவரமாய் கூறுகிறது.


ஸ்விம்மிங் சாம்பியன்ஷிப்பில் 7 பதக்கங்கள்.. “நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்” என மகனை கொண்டாடும் மாதவன்..




ஆளுநரின் குடைச்சல்! நெருக்கடியில் ஸ்டாலின்! பாலச்சந்தர் ஐஏஎஸ் விளாசல் | MK Stalin | Governor RN Ravi


இத்தானத்தை மடத்தின் சார்பாக ஆச்சரியர் திருவேங்கடமுடையானான நல்லான் என்பவர் பெற்றுக்கொள்கிறார். இக்கல்வெட்டு பொது ஆண்டு 1339-ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும். சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னரே திருப்பதி கோயிலின் மடத்துக்கு இங்குள்ள ஒரு ஊர் தானமளிக்கப்பட்டிருப்பதை நோக்கும்போது அக்காலத்திலேயே திருப்பதி புகழ்பெற்றிருந்ததை அறியமுடிகிறது என்று கூறினார்.


உயிரை பணயம் வைத்து வெள்ளத்தில் சிக்கிய தாய், பெண்ணை காப்பாறியவர்களை பாராட்டி முதல்வர்! MK Stalin