ஆரணி அருகே வேலை முடித்து வீட்டிற்கு சென்ற வாலிபர் விபத்தில் சிக்கி போலீசார் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரழந்ததாக சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வெள்ளேரி கிராமத்தில் வசிக்கும் விவசாயி பாபு என்பவரின் மகன் தரணிக்குமார் வயது (31) இவருக்கும் சென்னையைசேர்ந்த சுகன்யா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு லக்ஷன் வயது ( 2 ) மற்றும் தர்ஷன் என்ற 6 மாத குழந்தையும் உள்ளது. இந்நிலையில் தரணிக்குமார் ஸ்ரீபெரும்புத்தூர் என்ற ஊரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 3-ஆம் தேதி அன்று விடியற்காலை வேலைமுடித்துவிட்டு தரணிகுமார் சென்னையிலிருந்து ஆரணி நோக்கி வந்த அரசு பேருந்தில் பயணம்செய்து வந்துள்ளார். அப்போது வெள்ளேரி கிராமத்தின் இதற்கு முன் பேருந்து நிறுத்தமான அப்பந்தாங்கல் கிராமத்திலிருந்து சொந்த கிராமத்திற்கு சென்னை ஆரணி சாலையில் ஓரமாக நடந்து சென்றுள்ளார்.



அப்போது அடையாளம் தெரியாத வாகனம் தரணி குமார் மீது மோதி விபத்துக்குள்ளானார். இதில் தலையில் பலத்த காயமடைந்த தரணிகுமாரை அவ்வழியாக சென்ற நபர்கள் மீட்டு 108 ஆம்பூலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அதனைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இதில் கடந்த 3 நாட்களாக சிகிச்சைபெற்று வந்த தரணிக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரழந்தார். கடந்த 3-ஆம் தேதி விபத்தில் சிக்கிய நபரை உறவினர்களிடம் தகவல் தெரிவிக்காமல் காலம் தாழ்த்திய காவல்துறையினர் என்று உறவினர்கள் தெரிவிக்கிறார்கள் .மேலும் ஆத்திரமடைந்த தரணிக்குமார் உறவினர்கள் ஆரணி சென்னை சாலையில் திடிரென சுமார் 300க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர்




 


.இந்த விபத்தில் சிக்கிய நபரை பற்றி உறவினர்களிடம் தகவல் தெரிவிக்காததாக காவல்துறையினரை கண்டித்தும் மற்றும் விபத்து உள்ளாகியவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரி சாலை மறியிலில் ஈடுபட்டனர். பின்னர் தகவலிறந்த வந்த ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் காவல்துறையினர் தரணி குமாரின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில்பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


இந்த மறியல் சுமார் 4மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றாதால் சென்னை ஆரணி சாலையில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. ஆரணி அருகே விபத்தில் சிக்கிய நபரை பற்றி உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்காததாக சொல்லப்படும் நிலையில் ஒரு உயிர் பலியானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது