திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் உண்டியல்கள் வைக்கப்பட்டு, பக்தர்களிடம் இருந்து காணிக்கை பெறப்படுகிறது. அதேபோன்று கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயிலில், அஷ்டலிங்கக் கோயில்கள், திருநேர் அண்ணாமலை கோயில் மற்றும் துர்க்கை அம்மன் கோயில்களிலும் உண்டியல்கள் வைக்கப்பட்டு காணிக்கை பெறுவது வழக்கம். அவ்வாறு உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை, ஒவ்வொரு மாதமும் கணக்கிடப்படும். கொரோனா வைரஸ் பரவியதன் எதிரொலியாக நாடு முழுவதும் பொதுமக்களை பாதுகாக்க சுற்றுலா தலங்கள் வணிக தலங்கள் உட்பட அனைத்து ஆன்மீக ஸ்தலங்களும் மூடப்பட்டது. தமிழகம் முழுவதும் கடுமையான பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் சுமார் 2 வருடங்களாக மூடப்பட்ட கோவில்கள் கொரோனா வைரஸ் பரவுதல் குறைந்து வருவதால் ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் கொடுக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது.



தமிழகத்தின் முதன்மைக் கோயிலான திருவண்ணாமலை மாவட்டம் பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய அண்ணாமலையார் கோயிலில் கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு முடிந்த நிலையில் பல்வேறு தளர்வுகளுடன் ஜூலை மாதம் கடந்த 5 ஆம் தேதி திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டது. தங்கத்தேர், போன்றவை இயக்கப்படாத நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் நாள்தோறும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்ய ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்று திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே அனுப்பப்பட்டு  வருகின்றனர். இந்நிலையில் மார்கழி மாத பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்ல வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம் கொரோனா தொற்றால் ஊரடங்கு போடப்படத்தால் இந்த முறையும் கிரிவலம் சுற்றுவதற்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தடை விதித்திருந்தார் . 



அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காணிக்கை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. கோயில் ஊழியர்கள், மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் காணிக்கை எண்ணும் பணியில் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். சுமார் 50 உண்டியல்களில் சேகரிக்கப்பட்ட காணிக்கையை வகைப்படுத்திக் கணக்கிடப்பட்டது. கோயில் உண்டியலில் 1 கோடியே 78 லட்சத்து 89 ஆயிரத்து 35 மற்றும் 363 கிராம் தங்கம், 1,109 கிராம் வெள்ளி ஆகியவற்றை உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, வீடியோ கேமராக்கள் மூலமாகப் பதிவு செய்யப்பட்டது.


அதனைத்தொடர்ந்து , திருவண்ணாமலை அண்ணாம லையார் கோயிலில் இன்று முதல் வரும் 9ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக் கப்பட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட 3 நாட்களில் தரிசனத்துக்காக பக்தர் கள் வருவதை தவிர்க்க வேண்டும் என கோயில் இணை ஆணையர் கே.பி. அசோக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், கோயிலில் வழக்கம் போல தினசரி நடைபெறும் 6 கால பூஜைகள் மற்றும் வழி பாடுகள் தடையின்றி நடைபெறும். மேலும், உத்ராயண புண்ணிய கால உற்சவ வழிபாடும் வழக்கம் போல நடை பெறும். எனவே, அண்ணாம லையார் கோயிலுக்குள் குருக்கள் மற்றும் ஊழி யர்கள் மட்டுமே அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.