திருச்சி சிறப்பு முகாம் சிறை போலவே உள்ளது.. நளினி பேட்டி

ராஜீவ் வழக்கில் விடுதலை செய்யப்பட்டு சிறப்பு முகாமில் உள்ளவர்களை உடனடியாக வெளியில் அனுப்ப வேண்டும் - நளினி பேட்டி

Continues below advertisement

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டது உலகையே உலுக்கியது. இந்த கொலையில் தொடர்புடையதாக பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் கைதான 7 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கியது. இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தமிழக ஆளுநர் அதை கிடப்பில் போட்டார். இந்த நிலையில் கடந்த மே மாதம் பேரறிவாளன் விடுதலை கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தது.

Continues below advertisement

உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தங்களை விடுதலை செய்திடுமாறு நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சிறையில் இருந்து நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து  ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சியில் வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை முருகனின் மனைவி நளினி, ஜெயக்குமார் மனைவி சாந்தி ஆகியோர் இன்று நேரில் சந்தித்து பேசினர். 

அவர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நளினி கூறியது..  சிறப்பு முகாமில் உள்ளவர்கள் நலமுடன் இருக்கிறார்கள்.  மத்திய அரசும், மாநில அரசும் அவர்களை விரைவாக முகாமிலிருந்து வெளியே அனுப்ப வேண்டும். சாந்தன் இலங்கைக்கு செல்கிறேன் என்கிறார். நானும் என் கணவர் முருகனும் லண்டன் செல்ல விரும்புகிறோம். ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகிய இருவரும் அது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. நமக்கு நல்லது செய்தவர்களை சங்கடத்திற்குள்ளாக்க நான் விரும்பவில்லை அதனால் தான்  முதலமைச்சரை சந்திக்கவில்லை என்றார். முதலமைச்சர் எங்களுக்கானதை பார்த்து கொள்வார் நம்பிக்கை உள்ளது.


மேலும் 16 ஆண்டுகள் என் மகளை பிரிந்துள்ளேன், லண்டன் சென்று அவரோடு சேர்ந்து வாழ ஆசைப்படுகிறோம் என்றார். தொடர்ந்து பேசிய நளினி முகாம் என்பது தற்போது சிறை போல் உள்ளது. அதனால் அவர்களை வெளியில் அனுப்ப வேண்டும். மேலும் சில மக்கள் எங்கள் விடுதலையை எதிர்க்கிறார்கள். நான் காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவள் என் தாய்க்கு பெயர் வைத்ததே காந்திதான். இந்திரா காந்தி இறந்த போதும் சரி, ராஜீவ் காந்தி இறந்த போதும் சரி நாங்கள் மிகவும் வருத்தப்பட்டோம். அப்போது எங்கள் வீட்டில் யாரும் சாப்பிடவில்லை என்னை ராஜீவ் கொலையில் தொடர்புபடுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த பழியிலிருந்து மீண்டு வர வேண்டும். இந்த வழக்கிலிருந்து விடுதலையானால் கோவில்களுக்கு நேர்த்திக்கடன் செய்ய வேண்டி உள்ளேன் அதை செய்வேன்.

ராஜீவ் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் யார் என்பது என எனக்கு தெரியாது. இலங்கை செல்வதில் எங்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது என தான் நினைக்கிறோம் என கூறினார். தமிழ்நாட்டில் பாதுகாப்பாக உணர்கின்றீர்களா என்கிற கேள்விக்கு? நீங்கள் எல்லாம் இருக்கும்போது(பத்திரைக்கையாளர்கள்) எனக்கு என்ன குறை. உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை என்றார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola