Trichy Power Cut (22.08.25): திருச்சி மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 22 ஆம் தேதி) பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுகிறது. அதனால மக்களே நீங்கள் முன்கூட்டியே குடிநீர் பிடித்தல், தண்ணீர் நிரப்பிக் கொள்ளுதல் போன்ற முக்கியமான அத்தியாவசிய தேவைகளை செய்துக்கோங்க. அப்படியே உங்க ஏரியாவும் லிஸ்ட்ல இருக்கான்னு செக் செய்து கொள்ளுங்க.
திருச்சி மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 22) இந்த பகுதியில் எல்லாம் மின்சார விநியோகம் இருக்காத. மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாவட்டத்தில் சில முக்கிய இடங்களில் மின் தடை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
நாளைய மின் தடை எங்கே?
அம்மாபேட்டை
தாயனுார்சந்தை, கல்குடி, எண்ணம்குளத்தூர், ஆலம்பட்டிபுதூர், வெள்ளிவடை, அம்மாபேட்டை, கரியம்பட்டி, மறவாணு சமுத்திரம், சத்திரப்பட்டி, ராம்ஜி என்ஜிஆர், சமத்துவபுரம்
வாழவந்தான் கோட்டை
ஐயம்பட்டி, தேவராயனேரி, குமாரேசபுரம், எழில் என்ஜிஆர், திருநெடுங்குளம், தொண்டைமான் பட்டி, எம்ஜிஆர் கிளை, மேல மங்கவனம், கணேசபுரம், என்எஸ்கே என்ஜிஆர், சிப்கோ நிறுவனம்.
முன்னெச்சரிக்கை:
இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதற்கேற்ப திட்டமிட்டு அன்றாட பணிகளை முன்கூட்டியே முடிக்குமாறு மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.