பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்த பெங்களூருவைச் சேர்ந்த ஆலோசகர் மூலம் திருச்சி மாநகராட்சி நிறைவு செய்த விரிவான இயக்கம் திட்டம் ( சிஎம்பி ) திருச்சி மாநகரில் முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் நெட்வொர்க்கிற்கான அதிக தேவையுள்ள தாழ்வாரங்களாக, மூன்று சாத்தியமான வழித்தடங்களை அடையாளம் கண்டுள்ளது. மொத்தம் 68 கிமீ நீளத்திற்கு அடையாளம் காணப்பட்ட பொதுப் போக்குவரத்து வழித்தடங்கள், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ( சிஎம்ஆர்எல் ) முன்மொழியப்பட்ட திருச்சி மெட்ரோவிற்கான முதன்மைத் திட்டமாக செயல்படும் என அதிகாரிகள் கூறினர். மேலும் விரைவில் திருச்சியிலும் மெட்ரோ ரயில் சேவை திட்டம் தொடங்கப்பட உள்ளது. திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தை எந்தெந்த வழித்தடங்களில் அமைக்க முடியும் என்பது குறித்து பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனம் கடந்த ஓராண்டாக திருச்சியில் ஆய்வு நடத்தியது. இந்த தொலைநோக்கு ஆய்வறிக்கையை நடைபெற்ற மாநகராட்சி அவசர கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டது. இது குறித்து அந்த நிறுவனத்தை சேர்ந்த அழகப்பன் விளக்கி கூறினார். அதில், அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஒரு நகரத்துக்கு பொதுபோக்குவரத்து எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து திருச்சி மாநகரில் ஓராண்டு காலம் 803.75 சதுரகிலோ மீட்டரில் மேற்கொள்ளப்பட்ட தொலைநோக்கு ஆய்வு நடத்தப்பட்டது. அதன்அடிப்படையில் சமயபுரம் முதல் ஸ்ரீரங்கம், சத்திரம்பஸ் நிலையம், தில்லைநகர், வயலூர் வரை 18.7 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு வழித்தடமும், துவாக்குடி முதல் திருவெறும்பூர், பால்பண்ணை, பஞ்சப்பூர் வழியாக மத்திய பஸ் நிலையம் வரை 26 கிலோ மீட்டருக்கு ஒரு வழித்தடமும், ஜங்ஷன் முதல் விமானநிலையம், புதுக்கோட்டைரோடு, சுற்றுச்சாலை வரை 23.3 கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு வழித்தடமும் என 3 வழித்தடங்களில் மொத்தம் 68 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை திட்டத்தை நிறைவேற்ற சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.




இதன் ஆய்வறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பி, அதன் மூலமாக மத்திய அரசிடம் இருந்து இந்த திட்டத்துக்கான நிதி பெற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, அதன்பிறகு தான் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் கூறினார். மேலும், 66 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபாதை, பாதசாரிகள் சாலையை கடந்து செல்ல ஜங்ஷன் உள்பட 9 இடங்களில் வழித்தடம், காந்திமார்க்கெட் பகுதியில் சரக்கு ஒருங்கிணைப்பு மையம், இன்னும் 4 இடங்களில் பன்னோக்கு வாகன நிறுத்தும் இடம், ஸ்மார்ட் சிக்னல்கள் என பல்வேறு அம்சங்கள் அமைய உள்ளன.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண