திருச்சி மாவட்டத்தில் உள்ள 4 கிராமங்களில்  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


திருச்சி மாவட்டத்தில் லால்குடி அருகே உள்ள மங்கம்மாள்புரம், ஜங்கமராஜபுரம், கீழ் அன்பில், அன்பில் ஆகிய 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். 


இந்த தடை உத்தரவானது இன்று முதல் மார்ச் 8 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜங்கமராஜபுரம் ஆச்சிராமவள்ளி அம்மன் கோயில் மாசி தேர் விழாவில், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் இருப்பதால், 144 தடை உத்தரவு விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.