திருச்சி மாவட்டம் முக்கொம்பு ராமவாத்தலை வாய்க்கால் பாலத்தின் அருகே சாலையோரத்தில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. அதை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் சாலையோரத்திற்கு சென்று பார்த்தபோது, பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே காட்டுத்தீபோல் பரவியது. இதனையடுத்து அந்த குழந்தையை பார்க்க ஏராளமானோர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


 






 


இதுகுறித்து ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் குழந்தையை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். 




இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்?, குழந்தையை யாராவது கடத்தி வந்து வீசி சென்றார்களா? அல்லது கள்ளக்காதலால் பிறந்ததால் வீசி சென்றார்களா? காதலித்து ஏமாற்றப்பட்ட பெண் வீசி சென்றாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தை பிறந்து சில மணி நேரமே ஆவதால் பிரசவித்த பெண்கள் யாராவது அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.