புதுக்கோட்டை மாவட்டம்,  விராலிமலை அருகே உள்ள  பூதக்குடியில் காவேரி குடிநீர் குழாய் உடைந்து 50 அடிக்கு மேலாக குற்றால அருவியில் இருந்து கொட்டுவது போல் தற்போது தண்ணீர் கொட்டி வருகிறது. திருச்சி இருந்து குளத்தூர் , விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் வழியாக புதுக்கோட்டை செல்லும் ராமநாதபுரம் காவிரி கூட்டு குடி குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. காலை 10 மணியிலிருந்து ஏற்பட்ட உடைப்பானது தற்போது வரை எந்த ஒரு அதிகாரிகளும் வந்து இந்த குழாயினை சரி செய்யப்படாமல் குற்றால அருவி போல தண்ணீர் வீணாகி வருகிறது. 2007-ம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில்  கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் விராலிமலை மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளின் குடியிருப்பு வாசிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடிகிறது.  இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த திட்டத்தில் 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. மேலும்  இதனால் வழியில் உள்ள குடிநீர் குழாய்கள் ஆங்காங்கே பழுதடைந்துள்ளது.


 






 


மேலும் இந்த குழாய்கள் அவ்வே போது வெடிப்புகள் ஏற்பட்டு காவேரி நீரானது  வெளியேறி வீணாகி வருகிறது. நான்கு மணி நேரத்திற்கு மேலாக வெளியேறி வரும் இந்த நீரின் அளவு பல லட்சத்தை தாண்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.  தற்போது இங்க குற்றால அருவி போல் காட்சியளித்த வருவதால் அந்த பகுதி இளைஞர்கள் ஆர்வமுடன் குளித்து வருகின்றன. இங்கிருந்து வெளியேறும் காவேரி தண்ணீர் அருகில் உள்ள செங்கல் கால்வாயில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட செங்கல் தண்ணீரில் மூழ்கி காணப்படுகிறது. கோடை காலங்களில் தண்ணீர் பருகுவதற்கு எத்தனையோ கிலோமீட்டர் பெண்கள் குடிநீரை சுமந்து செல்லக்கூடிய இந்த சூழ்நிலையில் தற்போது வீணாகி வரும் இந்த தண்ணீர் பார்பவர்களை நெஞ்சை கலங்க வைத்துள்ளது. 









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண