தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் புதுக்கோட்டையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மாநில பொதுச்செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்சனை அதற்கான தீர்வுகள் என பல்வேறு கருத்துக்களை கொண்டு விவாதிக்கபட்டது. குறிப்பாக நெல் கொள்முதல் நிலையம் சரியாக பராமரிப்பது, விவசாயிகளின் விலைப்பொருட்களுக்கு உரிய விலையை நிர்ணையம் செய்வது. மேலும் விவசாய கடன், மானியம் வழங்குதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளுக்கு நிறந்திர தீர்வு காண மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கி அவர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் கண்காணிப்பாளராக பணி  அமர்த்தப்படுவார்கள் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யாமலேயே ஊதியம் வழங்கப்படுவதாகவும், முறைகேடு நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது.

 



 

மேலும் இதனை தடுக்க வாரம் ஒரு முறை சம்பள ரசீது வழங்க வேண்டும். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை 25 சதவீதம் குறைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. 100 நாள் வேலை திட்டத்தில் கிராமப்புறத்தில் மட்டுமில்லாமல் நகர்ப்புறத்திலும் பணி வழங்க வேண்டும் என்றார்.  இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்திற்கு பல குடும்பங்கள் படகில் வரத்தொடங்கி உள்ளனர். அங்கு மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் இப்படிப்பட்ட போராட்டம் நடக்க வெகுநாட்கள் இல்லை. 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற போது பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை ஏறாமல் இருந்தது.  தேர்தல் முடிந்த பின் அவற்றின் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்கிறது. இதனால் உணவு பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. ஏழை எளிய  மக்கள்  தொடர்ந்து பல பிரச்சனைகளை சமாளித்து வருகிறார்கள். குறிப்பாக அத்தியாவாசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதிபட்டுள்ளனர். இந்நிலை நீடித்தால் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனை விரைவில் இந்தியாவிற்கு வரும் என்றார்.

 



 

இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டிட்யுள்ளார். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்திற்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், எண்ணெய் நிறுவனங்கள் தான் முடிவு செய்கிறது என மத்திய அரசு பொய் சொல்கிறது. மருந்து மாத்திரைகள் விலைகளும், சுங்க கட்டணமும் உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வுக்கு எதிராக இலங்கையை போல் இந்தியாவிலும் மக்கள் போராட்டம் நடத்துவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.