இந்தியாவில் தேர்தல் நெருங்கி வருவதால் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகை புரிந்து வருகிறார். பாஜக கட்சியின் நிர்வாகிகளை சந்திப்பது, கோவிலுக்கு செல்வது, புதிய திட்டங்களை திறப்பது என்று பொய்யான தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருவதாக , திமுக, அதிமுக கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். நேற்று பிரதமர் மோடி சில திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார் அதில் குறிப்பாக இந்தியாவில் ஈனுலையை பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் அனுமதிக்க மறுத்துள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய வளர்ந்த நாடுகளே ஈனுலைகளை மறுத்துள்ளார்கள். மக்களுக்கு தீங்கு தரும் என வளர்ந்த நாடுகள் மூடிய ஈனுலையை தமிழ்நாட்டில் மோடி திறந்து வைத்துள்ளார். சோதனை எலிகளாக நம்மை பார்க்கிறார்கள்.இந்தியாவின் வளர்ச்சிக்கு சென்னை  உதவி இருக்கிறது என மோடி பேசி உள்ளார். அவர் தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒப்புதல் வாக்குமூலமாக தந்துள்ளார். இந்தியாவிற்கு உதவும் மாநிலமாக தி.மு.க ஆளும் தமிழ்நாடு தான் இருக்கிறது.




மோடிக்கு வயிற்றில் புலி கரைப்பதால் தான் தமிழ்நாட்டிற்கு மாதத்திற்கு ஐந்து முறை வருகிறார். தி.மு.க வை பார்த்து அச்சத்தில் இருக்கிறார்கள். வட மாநிலங்களில் காவி கொடி சரிந்து வருகிறது. வரும் தேர்தல் பா.ஜ.க விற்கு கடைசி தேர்தலாக இருக்க வேண்டும் இல்லையென்றால் அந்த தேர்தல் இந்தியாவிற்கே கடைசி தேர்தலாகிவிடும். அண்ணாமலை செய்தது நடைபயணம் அல்ல அது நடைப்பயிற்சி. தமிழ்நாட்டிற்கு வந்த மோடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களை சந்திக்கவில்லை. பல மாநிலங்களுக்கு செல்லும் மோடி மணிப்பூருக்கு செல்லவில்லை.தி.மு.க வை அழித்துவிடுவோம் என கூறியவர்கள் எல்லாம் அழிந்து போன வரலாறு மோடிக்கு தெரியவில்லை என்று நேற்று திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் விமர்சனம் செய்துள்ளார்.




திருச்சி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் ஏ.கே அருண் தலைமையில் திமுக தகவல் தொழில் நுட்ப அணியினர் உறையூர் பகுதியில் பிரதமர் மோடியின் முகமூடி அணிந்து தேர்தல் வாக்குறுதி என்ற பெயரில் மோடி வாயால் வடை சுடுகிறார் என்பது போல் துண்டு பிரசுரத்தில் வடையை பொதுமக்களிடம் கொடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.இந்த பிரச்சாரத்தில் மோடி சுட்ட வடை எனக்கூறி பொதுமக்கள் யாரும் மோடியை நம்ப வேண்டாம் என நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சாரத்தில் மேற்கு தொகுதி அமைப்பாளர் கோவிந்தசாமி, மாவட்ட துணை அமைப்பாளர் லட்சுமணன் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப அணியினர் மோடியின் முகமூடி அணிந்து கையில் வடையுடன் பிரசாரத்தில் கலந்து கொண்டனர்.