Loksabha Election: பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது தி.மு.க., அ.தி.மு.க.,  பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என நோக்கில் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய முன்தினம் 22 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ மற்றும் பெரம்பலூர்  பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்‌‌ அருண் நேருவை ஆதரித்து முதல் பிரச்சார பொதுக்கூட்டத்தை திருச்சி தொடங்கினார்.


இதன் ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தை திருச்சியில் தொங்குகிறார். அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள 40 தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்களை ஒரே மேடையில் ஆதரித்து பிரச்சாரத்தில் தொடங்குகிறரார்.




அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பிரச்சாரம்


அதிமுகவின் முதல் பரப்புரை கூட்டம் என்பதால், ஶ்ரீரங்கம் தொகுதி வண்ணாங்கோயில் பகுதியில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம், 1.30 மணியளவில் சேலத்தில் இருந்து காரில் புறப்படும் எடப்பாடியார், மதியம், 3.30 மணியளவில் திருச்சியை வந்தடைகிறார்.


திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு மாலை, 4.40 மணியளவில் வண்ணாங்கோயில் பரப்புரை கூட்ட திடலுக்கு வருகை தருகிறார். கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இன்றிரவு, 8 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட பரப்புரை பொதுக்கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த, 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டுகிறார்.


இந்த மேடையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எஸ்டிபிஐ கட்சி மாநில  தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.




திருச்சி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்


திருச்சி மாவட்டம், வண்ணாங்கோவிலில் இன்று 24.03.2024 தேதியன்று நாடாளுமன்ற தொகுதிகளின் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று 24.03.2024-ஆம் தேதி மதியம் 12.00 மணியிலிருந்து அத்தியாவசிய பொருட்கள், அவசர தேவை வாகனங்கள் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு வரும் வாகனங்களை தவிர, மற்ற அனைத்து வாகனங்களையும், கீழ்க்கண்ட வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட வேண்டும்.




போக்குவரத்து வழித்தட மாற்றம்


சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் திருச்சி மாநகரம் மன்னார்புரத்திலிருந்து பஞ்சப்பூர், மணிகண்டம், விராலிமலை, மணப்பாறை வழியாக செல்ல வேண்டும்


திண்டுக்கல்லில் இருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் மணப்பாறை, தோகைமலை, குளித்தலை, முசிறி, துறையூர் வழியாக செல்ல வேண்டும்.


திருச்சியிலிருந்து மணப்பாறை செல்லும் வாகனங்கள் மன்னார்புரத்திலிருந்து பஞ்சப்பூர், மணிகண்டம், விராலிமலை, நொச்சிமேடு ஜங்சன் வழியாக செல்ல வேண்டும்.


மணப்பாறையிலிருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் நொச்சிமேடு ஜங்சன். விராலிமலை, மணிகண்டம், பஞ்சப்பூர் வழியாக செல்ல வேண்டும்.