பொங்கல் திருநாளையொட்டி, அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில் 70 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை..

அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில் ஆட்டுசந்தையில் 70 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை ஆகியதாக வியபாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Continues below advertisement

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று வாரச்சந்தை நடைபெறுகிறது. இந்த வாரச்சந்தையில் காலையில் ஆட்டுச்சந்தையும், பின்னர் காய்கறிகள் சந்தையும் நடைபெறும். இந்நிலையில் பொங்கல் பண்டிகை இன்று(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதைத்தொடர்ந்து நாளை(திங்கட்கிழமை) மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்று மாலை மாடுகளுக்கு பொங்கல் வைத்து வணங்கிவிட்டு, பின்னர் ஆட்டுக்கறி சமைத்து வாழையிலையில் வைத்து குலதெய்வத்தை வழிபட்டு, பின்னர் குடும்பத்தில் உள்ளவர்கள் சாப்பிடுவார்கள். இதனால் மாட்டு பொங்கல் அன்று ஒவ்வொரு கிராமத்திலும் ஏராளமான ஆடுகளை அறுத்து, அதன் இறைச்சியை வியாபாரிகள் விற்பனை செய்வார்கள். இதையொட்டி நேற்று உடையார்பாளையம் ஆட்டு வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது. இதில் 50 ஆயிரம் ஆடுகளுக்கு மேல் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த வாரச்சந்தையில் ஒரு ஆடு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்றது. இதனால் விவசாயிகள் சந்தோஷமாக ஆடுகளை நல்ல விலைக்கு விற்று பணத்தை பெற்று சென்றனர்.

Continues below advertisement


இதேபோல் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் இருந்து அய்யலூர் செல்லும் சாலையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று ஆட்டுச்சந்தை கூடுவது வழக்கம். இந்த ஆட்டு சந்தைக்கு ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வரும். இந்த ஆடுகளை வாங்குவதற்காக ஆடு வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்டோர் ஏராளமானோர் வந்து செல்வார்கள். அதன்படி நேற்று அதிகாலை 3 மணியளவில் சிறுவாச்சூரில் ஆட்டுச்சந்தை தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடு வளர்ப்போர் மற்றும் விற்பனையாளர்கள் லாரி, சரக்கு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு அதிகாலையில் இருந்தே சிறுவாச்சூர் ஆட்டுச்சந்தையில் குவியத் தொடங்கினர்.

பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதால் ஆடுகளை வாங்க பொதுமக்கள், வியாபாரிகள், இறைச்சி கடைக்காரர்கள் வருவார்கள் என்று ஆடுகளுடன் கால்நடை வளர்ப்பவர்களும், வியாபாரிகளும் சந்தைக்கு வந்தனர். ஆனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அருகே உள்ள மாவட்டங்களில் சில பகுதிகளில் முன்கூட்டியே நேற்று ஆட்டுச்சந்தை நடத்தப்பட்டது. இதனால் எதிர்பார்த்த அளவுக்கு சிறுவாச்சூர் சந்தைக்கு ஆடுகளை வாங்க ஆட்கள் வரவில்லை. ஆனாலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடுகளின் விலை உயர்வால் சந்தையில் ஆடுகளின் விற்பனை அமோகமாக நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் சந்தையில் விற்பனையாகின. சுமார் ரூ.50 லட்சத்துக்கு மேல் ஆடுகள் விற்பனை ஆனது என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

Continues below advertisement
Sponsored Links by Taboola