ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா..? இனிமே சலிச்சுக்க வேண்டாம்.. சீக்கிரம் போயிடலாம்..!

திருச்சி கோட்டத்தில் உள்ள 33 முக்கியமான ரயில்வே கிராசிங்குகளில் பழைய தடுப்புகள் இருந்தன. ரயில் சிக்னலை கடந்த பின்னர் கேட் கீப்பர் வந்து தடுப்பை திறக்கும் நிலை இருந்தது. தற்போது மாற்றப்பட்டுள்ளன.

Continues below advertisement

திருச்சி: ரொம்ப நேரமா வெயிட் பண்றோம்... இன்னும் திறக்கலையே என்று வாகன ஓட்டுனர்கள் இனிமே சலிச்சுக்க வேண்டாம். அட ஆமாங்க... திருச்சி கோட்டத்தில் உள்ள முக்கியமான ரயில்வே கிராசிங்கில் மின்சாரத்தில் இயங்கும் புதிய தடுப்புகள் வந்திடுச்சு. மீதமுள்ளவற்றில் விரைவில் வர இருக்கு.

Continues below advertisement

திருச்சி கோட்டத்தில் உள்ள 33 முக்கியமான ரயில்வே கிராசிங்குகளில் பழைய தடுப்புகள் இருந்தன. இதனால் ரயில் சிக்னலை கடந்த பின்னர் கேட் கீப்பர் வந்து தடுப்பை திறக்கும் நிலை இருந்தது. இப்போது அவை  மாற்றப்பட்டுள்ளன. மின்சாரத்தில் இயங்கும் புதிய தடுப்புகள் (Electrically Operated Lifting Barrier - EOLB) பொருத்தப்பட்டுள்ளன. இதனால் ரயில்கள் சென்ற பிறகு சாலைகளில் வாகனப் போக்குவரத்து சீக்கிரமாகவே சீராகும். மேலும் 36 கிராசிங்குகளில் இந்த EOLB தடுப்புகள் விரைவில் நிறுவப்பட உள்ளன.


திருச்சி கோட்டத்தில் மொத்தம் 494 ரயில்வே கிராசிங்குகள் உள்ளன. அவற்றில் படிப்படியாக இந்த நவீன தடுப்புகள் பொருத்தப்படும். எந்த கிராசிங்கில் அதிக வாகனங்கள் மற்றும் ரயில்கள் செல்கின்றன என்பதைப் பார்த்து இந்த மேம்படுத்தல் பணி மேற்கொள்ளப்படும். 

பொதுவாக, பழைய தடுப்புகளில், ரயில் வரும்போது ஊழியர்கள் தடுப்புகளை மூடுவார்கள். ரயில் சென்ற பிறகு தடுப்புகளைத் திறப்பார்கள். இதற்கு ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் ஆகும். ஆனால், சிலர் பொறுமை இல்லாமல் தடுப்புகள் முழுமையாக திறப்பதற்கு முன்பே கடந்து செல்ல முயற்சி செய்கிறார்கள். இதனால் தடுப்புகள் சேதமடைகின்றன. சில நேரங்களில் வாகனங்கள் தடுப்புகள் மூடும்போது கூட நுழைந்து விபத்துகளை ஏற்படுத்துகின்றன.

இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க, திருச்சி ரயில்வே கோட்டம் ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. EOLB எனப்படும் மின்சாரத்தில் இயங்கும் தடுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு கிராசிங்கிற்கு சுமார் 16 முதல் 18 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இந்த புதிய முறையில், மின்சார மோட்டார்கள் மூலம் தடுப்புகள் 10 வினாடிகளில் திறக்கப்படும் அல்லது மூடப்படும். திருச்சியில், தேவஸ்தானம் மற்றும் திருச்சி டவுன் ஸ்டேஷனை இணைக்கும் இரண்டு முக்கியமான கிராசிங்குகளில் இந்த நவீன உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன.

EOLB முறையில், ஊழியர்கள் கம்பிகளை சுற்ற வேண்டியதில்லை. ஒரு பட்டனை அழுத்தினால் போதும், தடுப்புகள் திறக்கப்படும் அல்லது மூடப்படும். இந்த அமைப்பில் ஒலி எழுப்பும் கருவி (hooter) உள்ளது. இது வாகன ஓட்டிகளை எச்சரிக்கும். மேலும், மின்சாரம் தடைபட்டால் அல்லது ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், அவசரகால ஸ்லைடிங் பூம் (emergency sliding boom) என்ற வசதியும் உள்ளது. இதன் மூலம் தடுப்புகளை மூட முடியும்.

திருச்சி கோட்டம் மேலும் 36 கிராசிங்குகளை நவீனமயமாக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தல் கனரக வாகனங்கள் பாதுகாப்பாக கடந்து செல்ல உதவும். ஏனென்றால், கனரக வாகன ஓட்டுனர்கள் பழைய தடுப்புகள் திறக்கும் நேரத்தை தவறாக கணித்து ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்துகிறார்கள். இதனால் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இனி அந்த பிரச்னைக்கு டாட்டா காட்டி விடலாம். இதனால் வெகுநேரம் காத்திருக்கும் நிலையும் இல்லை. உடனே போக்குவரத்து சீராகும். இத்தகவல் திருச்சி வாகன ஓட்டுனர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola