திருச்சி மத்திய மண்டத்தில் 2019 ஆம் ஆண்டை விட 2020 ஆம் ஆண்டில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் சைபர் க்ரைம் மோசடிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் ஒவ்வொரு ஆண்டு நாடும் முழுவதும் பெண்களுக்கு எதிராக பதிவாகும் குற்றங்கள் தொடர்பான அறிக்கையை வெளியிடும். இதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக பதிவான குற்றங்கள் தொடர்பான அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டு 6,630 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகி உள்ளது. மேலும் வயதானவர்களுக்கு எதிராக 1,581 குற்றங்களும், பட்டியல் இன மக்களுக்கு எதிராக 1,274 குற்றங்களும் நடைபெற்றது. இதைத்தவிர்த்து 2,898 பொருளாதார குற்றங்களும், 782 சைபர் குற்றங்களும், 42,756 சூலியலுக்கு எதிரான குற்றங்களும் பதிவாகி உள்ளது. இதன்படி பார்த்ததால் மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.




இதன்படி 2020 ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டடத்தில் 67 குற்றங்களும், கரூர் மாவட்டத்தில் 85 குற்றங்களும், நாகையில் 144 குற்றங்களும், பெரம்பலூரில் 60 குற்றங்களும், புதுக்கோட்டையில் 212 குற்றங்களும், தஞ்சையில் 210 குற்றங்களும், திருவாரூரில் 175 குற்றங்களும் பதிவாகி உள்ளது. திருச்சியில் 217 குற்றங்களும், திருச்சி மாநகரில் 87 குற்றங்களும் பதிவாகி உள்ளது. மேலும் அரியலூரில் 6, கரூரில் 5, நாகையில் 11, பெரம்பலூரில் 1, புதுக்கோட்டையில் 14, தஞ்சையில் 11, திருவாரூரில் 57, திருச்சியில் 16, திருச்சி நகரத்தில் 3 என்று மொத்தம் 124 கடத்தல் வழக்குகள் பதிவாகி உள்ளது. மேலும் அரியலூரில் 9, கரூரில் 4, நாகையில் 14, பெரம்பலூரில் 3, புதுக்கோட்டையில் 7, தஞ்சையில் 3, திருவாரூரில் 10, திருச்சியில் 17, திருச்சி நகரத்தில் 6 என்று மொத்தம் 73 பாலியல் வன் கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளது.


இதன்படி மத்திய மண்டத்தில் 574 குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகி உள்ளது. இதன்படி அரியலூரில் 49, கரூரில் 33, நாகையில் 66, பெரம்பலூரில் 69, புதுக்கோட்டையில் 56, தஞ்சையில் 80, திருவாரூரில் 83, திருச்சியில் 158, திருச்சி நகரத்தில் 46 குற்றங்கள் பதிவாகி உள்ளது. அதில் அரியலூரில் 38, கரூரில் 31, நாகையில் 66, பெரம்பலூரில் 36, புதுக்கோட்டையில் 42, தஞ்சையில் 54, திருவாரூரில் 61, திருச்சியில் 90, திருச்சி நகரத்தில் 36 என்று மொத்தம் 448 போக்சோ குற்றங்கள் பதிவாகி உள்ளது. சைபர் குற்றங்களை பொறுத்த வரையில் அரியலூரில் 10, கரூர் 10, நாகையில் 12, பெரம்பலூரில் 9, புதுக்கோட்டையில் 69, தஞ்சையில் 35, திருவாரூரில் 24, திருச்சியில் 18, திருச்சி நகரத்தில் 24 என்று மொத்தம் 211 வழக்குகள் பதிவாகி உள்ளது. ஆனால் 2019 ஆம் ஆண்டு மொத்தம் 77 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.




மத்திய மண்டலத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக ஒவ்வொரு மண்டலத்திலும் காவல்துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பிலும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பெண்கள்,  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் போதை பொருள் விற்பனை செய்பவர்கள் போன்ற தீய செயல்களில் ஈடுபடுபவர்களை முழுமையாக கண்காணிக்கப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் மத்திய மண்டலத்தில் இனிவரும் காலங்களில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கும் வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.