தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று 28 ஆண்டுகளுக்கு பிறகு மாநகராட்சியின் முதல் ஆண் மேயராக திமுகவை சேர்ந்த மு.அன்பழகன் பதவியேற்றுள்ளார். மேயர் மு.அன்பழகன் 66 வயதாகும் இவர் MA பட்டதாரி ஆவார். முழு நேர அரசியல்வாதியாக செயல்பட்டு வரும் இவர் தற்போது திமுகவின்  திருச்சி மாநகர செயலாளர் பதவி வகித்து வருகிறார். மேலும் 1980 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். 1993 முதல் 1998ஆம் ஆண்டு வரை மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர், 1999ஆம் ஆண்டு முதல் திருச்சி மாநகர செயலாளர். பின்பு 2001 முதல் 2011ஆம் ஆண்டு வரை துணை மேயர். 2011 தேர்தலின்போது, அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கில் கைதாகி மத்திய சிறையில் இருந்தபடி பழைய 32 ஆவது வார்டில் போட்டியிட்டு, பிரச்சாரத்துக்கே போகாமல் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திருச்சி மாநகராட்சியில் இரண்டு முறை துணை மேயராக பதவி வகித்துள்ளார். குறிப்பாக தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேருவின் தீவிர ஆதரவாளர் ஆவார்.


திருச்சி மாநகராட்சியின் முதல் ஆண் மேயர் அன்பழகன் தேர்தல் வெற்றி குறித்தும், திருச்சி மாநகரில் செய்ய வேண்டியகள் பணிகள் குறித்தும் ஏபிபி நாடு இணையதளத்திற்கு பிரத்தேக பேட்டி அளித்துள்ளார். அதில் திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை 4 முறை கவுன்சிலராகவும், 2 முறை துணை மேயராகவும் பதவி வகித்தது பெரும் மகிழ்ச்சியை தந்தது என்றார்.




மேலும் திமுகவில் கடந்த 35 ஆண்டுகளாக பல்வேறு பொரறுப்புகளில் இருந்து எனது பணியை சிறப்பாக செய்துள்ளேன். மேலும் இந்தாண்டு திருச்சி மாநகராட்சியில் ஆண்கள் மேயராக வாய்ப்பு உருவாக்கபட்டது. இந்நிலையில் எனது தீவிர பணியையும், செயலையும் கருத்தில் கொண்டு அமைச்சர் நேரு ஆதரவோடு மேயர் பதவி எனக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2006 ஆண்டும் முதல் எனக்கு மேயர் பதவி பெற்று தரவேண்டும் என்று அமைச்சர் நேரு முயற்சி செய்து வருகிறார். தற்போது அந்த முயற்ச்சி நிறைவேறி உள்ளது. மேலும் நான் பதவியேற்கும் போது அமைச்சர் நேரு ’’இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா’’ என்று சொல்லும் போது எனக்கு மெய்சிலிர்தது. அந்த மகழ்ச்சியை வெளிபடுத்த வார்த்தை இல்லை என்றார். திருச்சியை பொறுத்தவரை முக்கிய பிரச்சனை என்றால் அது போக்குவரத்து நெரிசல், பேருந்து நிலையம் தான் இவற்றை சரி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. குறிப்பாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளபட்டுள்ளது.



தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில், திருச்சி மாநகராட்சியை முதல் இடத்திற்கு கொண்டு வருவதே எங்கள் நோக்கம் என்றார். மேலும் திருச்சி மாவட்டத்தில் வேலை வாய்ப்பை அதிகரிக்க ஐடி பார்க் கொண்டுவரப்படுமா ? என்ற கேள்விக்கு திருச்சி மாவட்டத்தை  பொறுத்தவரை இட வசதி, தண்ணீர் என அனைத்து விதமான வசதிகளும் உள்ளது. ஆனால் ஐடி பார்க் இங்கு வராமல் போனதுக்கு ஒரு முக்கிய காரணம் போக்குவரத்து வசதி தான் இவற்றை சரி செய்யும் நடவடிக்கைகள் தீவிரபடுத்தபட்டு உள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களுக்கு எளிதில் செல்ல புதிதாக ரிங் ரோடு அமைக்க திட்டமிடபட்டுள்ளது,  இன்னும் 2 ஆண்டுகளில் மாநகராட்சியை மேம்படுத்தபட்டு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க  திட்டமிட்டுள்ளோம். இதனை தொடர்ந்து திருச்சியில் இன்னும் 2 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நெரு அவர்கள் தொடங்குவார் என தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அன்பழகன் எனக்கு என்று கனவு திட்டம்  ஒன்றும்  இல்லை, அமைச்சர் நெரு அவர்களின் கனவு திட்டமே எனது கனவு திட்டமாகும் என்றார்.