தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட், கும்பகோணம், பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சென்னையிலிருந்து கும்பகோணம்,தஞ்சாவூர்,பட்டுக்கோட்டை,பேராவூரணி,மன்னார்குடி,நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு 9.11.2023 அன்று 250 கூடுதல் பேருந்துகளும், 10.11.2023 அன்று 750 கூடுதல் பேருந்துகளும், 11.11.2023 அன்று 520 கூடுதல் பேருந்துகளும், மேலும் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கு மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு 9.11.2023 அன்று 100 கூடுதல் பேருந்துகளும், 10.11.2023 & 11.11.2023 ஆகிய நாட்களில் 250 கூடுதல் பேருந்துகளும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் பொதுமக்கள் முழுமையாக இந்த செவையை  பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் 9.11.2023 முதல் 11.11.2023 வரை சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.




மேலும், கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு தட பேருந்துகள், தாம்பரம் சானிடோரியம் (MEPZ) அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும்.கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி. வேதாரண்யம் தட பேருந்துகள் கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது.


மேலும் தீபாவளி முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 12.11.2023, 13.11.2023, 14.11.2023 & 15.11.2023 ஆகிய நாட்களில் மேற்குறிப்பிட்டவாறு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




பயணிகள் வசதிக்காக கீழ்குறிப்பிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதி செய்யப்பட்டு வருகிறது.


சென்னை-திருச்சி, சென்னை - அரியலூர், சென்னை - ஜெயங்கொண்டம், சென்னை-கும்பகோணம், சென்னை - தஞ்சாவூர், சென்னை -  பட்டுக்கோட்டை, சென்னை - புதுக்கோட்டை, சென்னை - மயிலாடுதுறை, சென்னை-காரைக்குடி, சென்னை-கரூர், சென்னை- இராமநாதபுரம், சென்னை-சிவகங்கை, சென்னை - வேளாங்கண்ணி, சென்னை-திருவாரூர், திருச்சி - கோயம்புத்தூர், திருச்சி - இராமேஸ்வரம், திருச்சி-கொடைக்கானல் ஆகிய வழித்தடங்களில் முன்பதிவு பொதுமக்கள் தவறாமல் செய்து கொள்ள வேண்டும். ஏன்னென்றால் தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 




பொதுமக்கள் முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பேருந்து சேவையை அளிக்க ஏதுவாகும் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கிடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கும் முன்பதிவு சேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மொபைல் ஆப் (Mobile App) Android / I phone கைபேசி மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.


தீபாவளி பண்டிகை காலமாக இருப்பதால் கூட்ட நெரிசலை தவிர்த்து குடும்பத்தோடு எவ்வித சிரமம் இன்றி பயணிக்க “மொபைல் ஆப் (Mobile App) Android / 1 phone கைபேசி மூலமாகவும் - முன் பதிவு செய்து கொள்ளலாம்.மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.