புதுக்கோட்டை: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 3 வாலிபர்கள் கைது
புதுக்கோட்டை அருகே 7 மாதங்களாக கட்டாயப்படுத்தி மிரட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
Continues below advertisement
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தனது குடும்பத்தினருடன் கடந்த ஆண்டு மே மாதம் கோவில்வீரக்குடி என்ற கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவுக்கு வந்திருந்தார். அப்போது சிறுமியின் உறவினரான கோவில்வீரக்குடியை சேர்ந்த ரஞ்சித் (வயது 23), துரைராஜ் (24) ஆகிய இருவரும் சேர்ந்து சிறுமியை கட்டாயப்படுத்தி தனித்தனியே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இதனை நோட்டமிட்ட புதுப்பட்டியை சேர்ந்த ஆனந்த் (22) என்பவரும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் கிராமத்துக்கு அருகே பரவயல் கிராமத்தை சேர்ந்த கடலோர காவல் படையில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் வடிவேல் என்பவரும் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த 7 மாதங்களாக 4 பேரும் தனித்தனியே சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று சிறுமியை மிரட்டி உள்ளனர். ஒரு கட்டத்தில் 4 பேரின் தொடர் பாலியல் தொல்லையால் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து தனக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, நடந்ததை தனது தந்தையிடம் சிறுமி கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து சிறுமியை அவரது பெற்றோர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று டாக்டர்களிடம் காண்பித்தனர். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித், துரைராஜ், ஆனந்த் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான போலீஸ்காரர் வடிவேலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வடிவேலுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
Just In
திடீரென வெடித்த டேங்கர்.. பற்றியெரிந்த ரசாயன தொழிற்சாலை.. ஊழியர்களின் நிலை என்ன?
அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்.!! நவம்பர்ல பறக்கும் ரயில் சேவை தொடங்குது, எங்க தெரியுமா.?
"மனிதகுலத்திற்கு கற்பனை செய்து பார்க்க முடியாத சேதம்" எச்சரிக்கும் ஜனாதிபதி முர்மு
அஜித் குமார் உடலில் 18 இடங்களில் படுகாயம்; சிவகங்கை போலீஸ் காவலில் என்ன நடந்தது?; பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்
வீரப்பனுக்கு நினைவிடம் வேண்டும்: அமைச்சரிடம் கோரிக்கை வைத்த முத்துலட்சுமி
கூட்டணி கட்சிகள் இல்லை என்றால் திமுகவுக்கு வாக்கு வங்கி கிடையாது - நத்தம் விஸ்வநாதன்
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.