திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த எம்.புதுப்பட்டி ராசிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50). இவருக்கு புகழேந்தி, நவீந்திரன் ஆகிய 2 மகன் உள்ளனர். இதில் நவீந்திரன் (16). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் பள்ளிக்கு சரியாக செல்லாமல் இருந்த நவீந்திரனை பள்ளிக்கு செல்லுமாறு அறிவுரை கூறியதாக தெரிகிறது. இதனிடையே வீட்டில் யாரும் இல்லாதபோது, சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




இதேபோல் மணப்பாறை பூமாலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் முன்னாள் தி.மு.க. நகர்மன்ற கவுன்சிலராக இருந்தார். இவரது மகன் லியோ ஆல்பர்ட் (24). இவர் நேற்று வீட்டில் பெற்றோர் இல்லாத நிலையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து சென்று பார்த்த போது நீண்ட நேரத்திற்கு முன்னரே ஆல்பர்ட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இறந்த லியோ ஆல்பர்ட் நேற்று முன்தினம் மணப்பாறையில் நடைபெற்ற பாக்ஸ் கிரிக்கெட்டில் பங்கேற்றுள்ளார். அதில் அவரின் அணி வெற்றி பெற்றது. இதைதொடர்ந்து வெற்றிக்கொண்டாட்டத்தை அவரது நண்பர்களுடன் கொண்டாடினார்.இந்த நிலையில் ஆல்பர்ட் தற்கொலை செய்து கொண்டது நண்பர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.




இதேபோல் தொட்டியம் அருகே உள்ள அலகரை அரியனாம்பேட்டையை சேர்ந்தவர் பழனியாண்டி. விவசாயி. இவரது மகன் சரண் (22). இவர் 11-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சரண் வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் தினமும் மது குடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது தந்தை பழனியாண்டி மது பழக்கத்தை கைவிடுமாறு சரணை கண்டித்துள்ளார். இந்தநிலையில் சரண் குடிபோதையில் விஷத்தை குடித்தார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


 


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.