சமுதாய வளர்ச்சிக்குச் சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுகிறது. இந்த விருது ரூ100000- ரொக்கம், பாராட்டுபத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாகும். அதன்படி 2024ம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.08.2024 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இவ்விருது தொடர்பாக கீழ்க்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.


முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கான விண்ணப்பிக்கும் தகுதிகள்



1. 15 முதல் 35 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 1 2023 (01.04.2023) அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் மார்ச் 31 2024 (31.03.2024) அன்று 35 வயக்குள்ளாக இருத்தல் வேண்டும்.


2. கடந்த நிதியாண்டில் (2023-2024) அதாவது 01.04.2023 முதல் 31.03.2024 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.


3. விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும் (சான்று இணைக்கப்பட வேண்டும்).


4. விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும் அளவிடக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.


5. மத்திய மாநில அரசுகள் பொதுத் துறை நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.


6. விண்ணப்பதாரருக்கு உள்ளுர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.


7. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 01.05.2024 முதல் கடைசி நாள் 15.05.2024 அன்று மாலை 4.00 மணி ஆகும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி 


விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in , http://www.sdat.tn.gov.in உள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நலன் அலுவலர் திருவண்ணாமலை மாவட்டம் அவர்களை அலுவலக வேலை நாட்களில் 7401703484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.