என்எல்சிக்கு எதிராக நெய்வேலியில் நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் ஈடுபட்டதாக 55 பேர் பாட்டாளி மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களில் 20 பேர் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், 18 பேர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 20 பேரை பார்ப்பதற்காக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நெல்லை வந்தார். அவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் கோ. க மணி உள்ளிட்ட 5 சட்டமன்ற உறுப்பினர்கள் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு சென்று அங்கே அடைக்கப்பட்டுள்ள கட்சியினை பார்த்து ஆறுதல் கூறினர். அவர்களுக்கு ரொட்டி பழங்கள் போன்றவையும் வழங்கினர். 

Continues below advertisement

தொடர்ந்து பாமக மாநில தலைவர் எம்.பி அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "என்எல்சிக்கு எதிராக அமைதியாக தான் போராட்டம் நடைபெற்றது. அதில் சில சமூக விரோதிகள் ஊடுருவி கலவரத்தை ஏற்படுத்தினர். காவல் துறையினரும் எங்களது கட்சியினரை கல் வீசி தாக்கி மண்டைகளை உடைத்தனர். என்எல்சிக்கு எதிராக யாரும் போராடக் கூடாது என்பதற்காகவே கடுமையான நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது. என்எல்சியில் மூன்றாவது குவாரி தோண்டப்பட உள்ளது. இதற்காக அப்பகுதியில் உள்ள 23 கிராமங்களில் 25,000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படாது என சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிமொழி அளித்திருந்தார். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி மூன்றாவது சுரங்கம் அமைக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அது குறித்து ஏன் ஸ்டாலின் வாய் திறக்கவில்லை. என்.எல்.சி வெளியேற வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இப்போது விளை நிலங்களை அழித்துவிட்டு பின்னர் சாப்பாட்டிற்கு என்ன செய்ய போகிறோம். அனைத்து விவகாரத்திலும் பாஜகவை எதிர்க்கும் திமுக என்.எல் சிக்கு மட்டும் ஏன் ஆதரவாக இருக்கிறது. வரும் சில ஆண்டுகளில் தனியாருக்கு என்.எல்.சியை கொடுக்கப்போகிறது.

அண்ணாமலைக்கு தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் டெல்லி சென்று நிலக்கரியை இறக்குமதி செய்து அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய கோரிக்கை வைக்கட்டும். நெய்வேலி தொடர்பான போராட்டமே மத்திய மாநில அரசுகளை கண்டித்துதான் நடக்கிறது. என்.எல்.சி விவகாரம் என்பது மண், மக்களுக்கு எதிரான பிரச்சனை., தமிழகத்தில் இருக்கும் அனைவரும் என்.எல்.சிக்கு எதிராக போராட்டம் நடத்தவேண்டும். சட்டமன்றத்தில் புதிய நிலக்கரி சுரங்கம் வராது என முதல்வர் உறுதிகொடுத்தார். ஆனால் இந்த விவகாரம் நடக்கும் நிலையில் எந்த பதிலும் இல்லை. தொடர்ந்து எங்கள் போராட்டம் கடுமையான முறையில் நடக்கும்., இந்த பிரச்சனை தேர்தலுக்காக நடத்தபட்ட போராட்டமல்ல.  பூடான் நாட்டில் புகையிலை பொருட்களுக்கு தடை உள்ளது போல் இந்தியாவிலும் வரவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 13½ லட்சம் பேர் புகையிலையால் மரணம் நடக்கிறது. 2026 ல் பாமக மற்றும் அதனையொட்டியுள்ள நோக்கம் உள்ள கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதே எங்கள் இலக்கு. அதற்கான நடவடிக்கைகள் 2024 ல் தொடங்கும். புகைப்பிடித்தல் தொடர்பான கடுமையான சட்டங்கள் கொண்டு வந்து அதனை தடுக்க உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

Continues below advertisement

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண