கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ராஜாக்கமங்கலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஆறுதெங்கன் விளையை சேர்ந்தவர் ராஜன் (40) இவரது மனைவி பார்வதி இவர்களுக்கு தேன்மொழி (13) வர்ஷா (10) ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர். இவர்கள் ஆலங்கோட்டை ல் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முறையே எட்டாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு படித்தனர். இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி வீட்டில் பட்டாசு தயாரிக்க வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து திடீரென வெடித்தது .

 



 

இதில் வீடு இடிந்து வர்ஷா உடல் சிதறி பலியானார். இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த கல் விழுந்ததில் பார்வதி படுகாயமடைந்தார். சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் ராஜாக்கமங்கலம் போலீசார் வெடி விபத்து நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார் இவர்களுக்கு பட்டாசு தயாரிக்கும் வெடிமருந்து எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தியதில் பாக்கிய ராஜாவுக்கு பட்டாசு தயாரிப்பதற்காக வெடி மருந்தை அந்த பகுதியைச் சேர்ந்த ராமலெட்சுமி மற்றும் அவரது தங்கை தங்கம் ஆகியோர் கொடுத்தது தெரியவந்தது. 

 



 

இதனைத் தொடர்ந்து அவர்கள் வீடுகளில் ராஜாக்கமங்கலம் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் அங்கிருந்த 75 கிலோ வெடிமருந்தை போலீசார் கைப்பற்றினர். மேலும் பட்டாசு தயாரிப்பதற்காக பாக்யராஜுக்கு வெடிமருந்து கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ராமலட்சுமி மற்றும் அவரது தங்கை தங்கம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர் .தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.